திருப்பதி
கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றோம் பின் முதல் நான்கு
பகுதிகளில், அது தொடர்பான
1. இந்து மத பின்னணி
2. புராண இதிகாச
கதைகளையும்
3. இலக்கியங்களில்
சான்றுகளையும்,
4. வரலாற்று
கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும்
5. வெளிநாட்டு
யாத்திரிகர்களின் பயன குறிப்புகளையும் ஆராய்ந்தோம்
6. அதன் மூலம் திருப்பதி
மலை, பொட்டல்கா என்று யுவான்சாங்-ஆல் குறிப்பிடப்பட்டதையும்
7. அந்த பொட்டல்கா, புல்லி
என்ற களப்பிற மன்னனின் பெயரால் புல்லிக்குன்றம், என்று அழைக்கப்படுவதையும்
அகநானூறு பாடல்கள் மூலம் அறிந்தோம்
அவை
மூலம் நாம் இதுவரை அறிந்தது, ராமானுஜர் காலத்துக்கு முன் திருப்பதி ஒரு பெருமாள்
கோயில் அல்ல என்பது மட்டுமன்றி அது ஒரு புத்தர் கோயிலாக இருக்கவே வாய்ப்புகள்
அதிகம் என்றும் உணர்ந்தோம்,
மேலும்
நம் வாதத்திற்கு வலுசேர்க்க என்ன சான்றுகள் உள்ளன என்று பார்ப்போம்
இந்திய
வரலாற்றில் நாம் கூர்ந்து கவனித்தால், ஒன்று புலப்படும், குப்தர்கள் காலம் வரை
இந்தியாவில் உருவவழிபாடு இருந்தற்கு எந்த சான்றுகளும் கிடையாது. அசோகர் காலத்தில்
கூட அவர் ஸ்தூபிகள், மற்றும் ஸ்டுப்பா என அழைக்கப்படும் புத்தவிகாரம் தான்
கட்டினார், எங்கும் புத்தர் சிலைகள் கூட கிடையாது.
சிலை
வைத்து வழிபடும் வழக்கம் கிரேக்கர்களின் முறை, கிமு300-ல் அலக்சாண்டர் இந்தியா
மீது படையெடுத்து, பின் கிரேக்கம் திரும்பும் போது, இன்றைய ஆப்கானிஸ்தான்,
பகுதியில் செலுக்கஸ் நிகேடார் என்ற தன தளபதியை விட்டு செல்கிறான், அவன் மகளை
சந்திரகுப்த மௌரியன் மணந்த வரலாறும் உண்டு.
இந்த
செலுக்கஸ் நிகேடார், வழி வந்தவர்கள் தான் பிற்காலத்தில் குஷானர்கள் என்று
அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தலைநகரம், பாமியான், பெஷாவர், தக்ஷசீலம், மதுரா
போன்ற இடங்களில் இருந்தது, இவர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடக்கு
சீனா மற்றும் மத்திய இந்தியா வரை ஆண்டுவந்தார்கள் காலம் கிபி 30 - 230
இவர்களில் கனிஷ்கன் என்ற மண்ணின் காலத்தில் தான் புத்தருக்கு முதலில் சிலைவடிவ
வழிபடும் முறை தொடங்குகிறது. இதன் பின் தான் புத்தருக்கு பிரம்மாண்டமான சிலைகள்
உருவாக்கப்படுகிறது.
இந்த
குஷானர்கள் உருவாக்கிய பல சிலைகள் தான், ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மலைகளில்,
தாலிபான்களால் சில வருடங்களுக்கு முன் தகர்க்கப்பட்டன
இவர்கள்
உருவாகிய புத்தரின் வடிவங்கள் மூன்று:
1. மைத்ரேயா(புத்தரின்
கடைசி அவதாரம்)
2. அவலோகிதா (பத்மபாணி –
தாமரை அணிந்தவன்)
3. மஞ்சுஸ்ரீ
(குமாரபுத்தன்)
பிற்காலத்தில்
மகாயான புத்தம் பிறந்தபோது, இந்த மூன்று வடிவங்களை எட்டு வடிவங்களாக மாற்றிவிட்டார்கள்
1. அவலோகிதீஸ்வரா
(பத்மபாணி – தாமரை அணிந்தவன்)
2. மஞ்சுஸ்ரீ (குமாரபுத்தா
– சிறுவன் வடிவில் புத்தர்)
3. வஜ்ரபாணி (வஜ்ராயுதம்
தாங்கியவன்)
4. சமந்தபத்ரா
5. ஆகாஷ்கர்பா
6. மகாஸ்தானப்ராப்தா
7. பைஷ்ஜியராஜா
8. மைத்ரேயா (இவரே உலகம்
அழியும் போது வரக்கூடிய புத்தரின் கடைசி அவதாரம்)
இந்த
புத்தரின் 8 அவதார கதைகள் மற்றும் ஜைன மதத்தில் உள்ள நரன், நாராயணன், வாசுதேவன்,
பிரதிவாசுதேவன் கதைகள் எல்லாம் மொத்தாமாக கலந்து செய்த கலவை தான் விஷ்ணுவின் பத்து
அவதார கதைகள்.
மேலே
சொன்ன 8 வடிவங்களில் அவலோகிதீஸ்வரா வடிவம் இந்தியாவில், கிபி நாலாம்
நூற்றாண்டில் மிகவும் பிரபலம். நீங்கள்
அஜந்தா, எல்லோரா ஒவிங்களில் பார்ப்பது இந்த அவலோகிதீஸ்வரா (எ) பத்மபாணி உருவமே.
இந்த
அவலோகிதீஸ்வரா சிலைகள் எப்போதுமே, ஒரு செல்வ செழிப்புள்ள நபராகவே
சித்தரிக்கப்படும் (புத்தராக மாறும்முன் முன் சித்தார்த்தன் ஒரு அரசகுமாரன்) இந்த
அவலோகிதீஸ்வரர் குபேரனின் இன்னொரு வடிவம் என்று சொல்லப்படுகிறது.
![]() |
| அம்பிகை சிலை |
| கஜலட்சுமி சிலை |
பொதுவாகவே
இந்த அவலோகிதீஸ்வரா சிலைகள் தனியாக நிற்கும் வடிவில் தான் காணப்படும், சில
நேரங்களில் ஸ்ரீமஹாதேவி(லட்சுமி)-யுடன் காணப்படும். என்ன ஸ்ரீமஹாதேவி(லட்சுமி)
புத்த கடவுளா, என்று கேட்டால் லட்சுமி மட்டுமல்ல, சரஸ்வதியும் புத்த கடவுளே. அம்பிகை
எனப்படும் பார்வதியும் ஜைன கடவுளே
மத்தய
பிரதேசத்தில் உள்ள பர்ஹூட் ஸ்டுப்பா-வில் உள்ள சிலைகளை
பார்த்தால், அவற்றில் கஜலட்சுமி, அம்பிகை (எ) பார்வதியும், லஜ்ஜா
கெளரி, என்னும் ஆதி பராசக்தியின் மூலவடிவம் என்று எல்லோரையும் காணலாம். இவர்கள்
புத்த மதத்தில் யக்ஷிகள் எனப்படும் குறுந்தெய்வங்கள், பின்காலத்தில் இந்துமதத்தில்
பெருந்தெய்வங்களாக மாறியவர்கள்.
இந்த
அவலோகிதீஸ்வரர் யார் என்று கேட்டால், உலகில் மனிதனாக பிறக்கும் எல்லா உயிரும்,
புத்தரிடமிருந்தே வருகிறது, அப்படி பிறந்த ஒருவன், புத்தரின் கொள்கைகள் படி
வாழ்ந்து, அதனால் போதிசத்துவன் ஆகிறான், அவனே பின்னாளில், நிர்வாணநிலை அடைந்து
புத்தரோடு சேர்ந்து புத்தனாகவே மாறிவிடுகிறான். என்பதே புத்தமதத்தின் முக்கிய கோட்பாடு, அந்த கோட்பாட்டின் வெளிப்பாடே இந்த அவலோகிதீஸ்வரர்.
இதை
நகல் எடுத்து தான், பின்னாளில் ஆதிசங்கரன், ஆதியில் ஜீவாத்மா பரமாத்மாவோடு தான்
இருந்தது, பூமியில் பிறந்தபின் மாயை காரணமாக, ஜீவாத்மா பரமாத்மா வேறு என்று
குழம்புகிறது, பூமியில் மனித வடிவில் பிறந்த ஜீவாத்மா தான் பிறந்த வர்ணத்துக்கான
தர்மம்படி சரியாகா எல்லா வேல்களையும் செய்தால், படிப்படியாக முன்னேறி, இறுதி
பிறப்பாக பார்பனாக பிறந்து முக்தி அடைந்து பரமாத்மாவோடு சேர்ந்துவிடுகிறது என்று சொல்லி தனது மாயாவாதம் என்ற அத்வைதம் என்ற
கொள்கைப்படி இன்றைய வடிவமான இந்துமதம் என்று சொல்லப்படும் சனாதன மதத்தை
உருவாக்கினான். மாயவாததிற்கு மூலமே மகாயான புத்தமதத்தின் சூன்யவாத தத்துவமே.
![]() |
| பிகாரில் கிடைத்த அவலோகிதீஸ்வரர் சிலை |
திருப்பதி
விஷ்ணு கோயிலா என்ற வாதத்தில் ஏன் இந்த அவலோகிதீஸ்வரர் பற்றி இவ்வளவு விளக்கம்
என்று கேட்டால், இந்த அவலோகிதீஸ்வரர் சிலைக்கும் விஷ்ணு சிலைக்கும் பெரிய
வித்தியாசம் எதுவும் இருக்காது, ஒரே வித்தியாசம், ஆயுதம் வைத்திருந்தால் விஷ்ணு
இல்லையென்றால் அவலோகிதீஸ்வரர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள்
ஏற்கனவே ராமானுஜர், திருப்பதி கோயிலில் இருக்கும் பெருமாளிடம் ஆயுதம் இல்லை என்பதை
அவரே ஒப்புக்கொண்டுள்ளார். யுவான்சாங் போட்டல்காவில் இருந்தவர் அவலோகிதீஸ்வரர்
தான் என்றும் சொல்லிவிட்டார்.
மேலே
சொன்ன பொருள்களை எடுத்துகொண்டால் அவலோகிதீஸ்வரர் லட்சுமியுடன் இருப்பார் என்றும்
தெரிகிறது.
மற்றும்
ஒரு சேதி என்னவென்றால், களப்பிற மன்னனான புல்லியின் மலை இது என்பது, களப்பிற
மன்னர்கள் புத்தமதத்தை சேர்ந்தர்வர்கள்
![]() |
| பாகியான் இந்தியா வந்த போது சித்திரம் |
இந்த களப்பிரர் காலம் கிபி200-500 வரை. யுவன்சாங் இந்தியா வந்தது கிபி600.
அவருக்கு முன் சீன தேசத்தில் இருந்து வந்தவர் பாகியான்(Fa-hein) அவர் வந்த
காலகட்டம் கிபி350. இந்த காலகட்டத்தில் இந்தியா வந்த இவர் தான் பார்த்த பல புத்த
கோயில்கள் பற்றி சொல்லும் போது
இந்தியாவில்
பூரி நகரில் புத்தரை ஜெகநாதன் (உலகின் தலைவன்) என்ற கோயிலில் ஒரு ரதத்தில் வைத்து
ஊர்வலமாக கொண்டு வந்ததை சொல்கிறார்
பாகியான்
மட்டுமல்ல யுவான்சாங்கும் பல புத்தர் கோயில்களில் புத்தரை ஒரு ரதத்தில் வைத்து
ஊர்வலமாக கொண்டு வந்ததை சொல்கிறார்கள்
இதையெல்லாம்
தாண்டி ராமனுஜர் ஏன் திருப்பதியை தேர்ந்தெடுத்தார் என்றால் அப்போது சுங்கம்
தவிர்த்த சோழன் என்று சொல்லப்படும் குலோத்துங்கன் தென்னிந்தியாவை ஆண்டு வந்தான்.
ராமானுஜர் முதலில் மாற்ற முயற்சி செய்தது திருச்சானூர் புத்த கோயிலைத்தான், ஆனால்
அந்த கோயில் மலைக்கு கீழே சமதளமான இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் அதை சிவன்
கோயிலாக மாற்ற முயன்று கொண்டிருந்தனர்.
சோழர்கள்
காலத்தில் ஏன் இப்படி எல்லா புத்த கோயில்களையும் சிவன் கோயில் அல்லது விஷ்ணு
கோயிலாக மாற்றினார்கள் என்றால். இரண்டு காரணங்கள் உண்டு
முதல் காரணம், தன் தந்தை உயிருடன் இருந்தபோது, ராஜராஜன் ஈழத்துக்கு போர் செய்ய
சென்றபோது அங்கே இருந்த பெரிய பெரிய புத்தர் கோயில்களை பார்த்து அதே போல சிவனுக்கு
ஒரு பெரிய கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இரண்டாம்
காரணம் ராஜராஜன் அரசன் ஆனபின் ஏற்பட்ட தனி சோகம் ஒன்று உண்டு
எல்லோருக்கும்
தெரிந்த ராஜராஜ சோழனுக்கு, ராஜேந்திரனும் குந்தவையும் மட்டுமே பிள்ளைகள், உண்மையில்
அவனுக்கு மூன்று பிள்ளைகள், ஆனால் ராஜராஜ சோழனுக்கு சந்திரமல்லி என்ற பெயரில்
மற்றுமொரு மகள் உண்டு அவள் ஒரு ஈழ நாட்டு பௌத்த இளவரசனை காதலித்தாள் அந்த காதல்
பிரச்சனையில், காதலன் எதிர்பாராமல் கொல்லப்பட, தந்தை ராஜராஜன் தான் அந்த கொலைக்கு காரணம் என்று ராஜராஜன் மேல் கோபம் கொண்டு தந்தையை பிரிந்த சந்திரமல்லி நாகப்பட்டினம் புத்தவிகாரத்தில் புத்த சந்நியாசியாக மாறி தனது பெயரை மாதேவடிகள்
என்று மாற்றிகொண்டாள்
சோழர்கள் புத்த மத அழிப்பு வேலைகளுக்கு இதுவும் ஒரு காரணமே.
மேலே
சொன்ன திருச்சானூர் கோயிலை வைணவ கோயிலாக மாற்றமுடியாத ராமானுஜர் அதற்கு அருகில்
வேங்கடமலை மேலே உள்ள கோயிலை மாற்ற முயற்சி
செய்து மாற்றியது தான் திருப்பதி கோயில்.
அவலோகிதீஸ்வரா சிலைகள் ஆயுதம் இல்லாமல்
இருக்கும் என்பதும், திருப்பதி விஷ்ணுவுக்கும் ஆயுதம் இல்லை எனபதை ராமானுஜரே
ஒப்புகொள்வதையும் இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்,
திருப்பதி
கோயிலில் உள்ள பொருள்களையும் புத்த மத வழிபாட்டு முறைகளையும் நோக்கினால், கீழ்
கண்ட பொருள்களை நாம் புரிந்து கொள்ள முடியும்
1. ராமானுஜர் தன் கடின
முயற்சியில் தான் இதை ஒரு பெருமாள் கோயில் என்று நிறுவுகிறார், எனவே அது விஷ்ணு
கோயில் அல்ல என்ற சர்ச்சை அப்போதே இருந்தது
2. தலையை மொட்டை
அடித்துகொள்வது, பார்பனர் முறை அல்ல, இந்துமத முறை அல்ல, புத்த
மதத்தில் புனிதமானது இந்த முறை,
3. குடுமி வைப்பது தான்
பார்பனமுறை, இந்துமதத்தில், மொட்டியடிப்பது, விதவைகளுக்கும், ஒருவரை
அவமானப்படுத்த செய்யப்படும் தண்டனை முறையும் ஆகும், அல்லது ஒருவரின் இறப்பின் துக்கத்தை
கடைபிடிக்கும் முறையும் ஆகும்.
4. இன்னும் சொல்லவேண்டும்
என்றால் விஷ்ணு புராணம் (பாகம்3, அதிகாரம்18, பாடல்கள் 53-100) சொல்வது ஒரு
முண்டகனை (மொட்டைதலையனை) பாஷாண்டியை நேரில் பார்த்தாலோ, பேசினாலோ அடுத்த 7 பிறவிகளில்
எத்தனை தண்டனைகள் கிடைக்கும் என்று விரிவாக சொல்கிறது
5. திருப்பதி தவிர வேறு
எந்த பெருமாள் கோயிலிலும் மொட்டை அடிக்கும் வேண்டுதல் முறை கிடையாது
6. எந்த இந்து கோயில்களில்
எல்லாம் மொட்டை அடிக்கும் வேண்டுதல் முறை உள்ளதோ அவை எல்லாம் முன்னாளில் ஜைன
மற்றும் புத்த கோயில்களே
7. சீன யாத்திரிகர் பாகியான்
சொல்வதுபோல ரதத்தில் கடவுளை வைத்து ஊர்வலம் வருவது புத்த முறை, கடவுளின் ரதயாத்திரை
ஏன் இந்துமத முறையாக இருக்கமுடியாது என்றால், வருணாசிரமம் படி மனு சொல்வது 4 வருணத்தாரும்
சேர்ந்து ஒரு வேலையை செய்யக்கூடாது, ஒரு தேர் அல்லது ரதம் சுற்றி வரவேண்டும்
என்றால் பிராமணன் முதல் சூத்திரன் வரை எல்லோரும் சேர்ந்துதான் அந்த வேலையை
செய்யவேண்டும், அதனால் ரதயாத்திரை இந்துமத முறையாக இருக்கமுடியாது.
8. திருப்பதி கோயிலில்
இன்றும் பிரமோற்சவம் விழாவில் ரதயாத்திரை மிக முக்கியபங்கு வகிக்கிறது
9. திருப்பதி கோயில் மட்டுமே
ஏகமூர்த்தி ஆதாவது விஷ்ணு தனியே மூல விக்கிரகமாக இருக்கும் கோயில், அவலோகிதீஸ்வரர்
தான் தனியே இருப்பார்
10. திருப்பதி கோயிலில் சயன
மண்டபம் 18 அடி நீள அகலம் கொண்ட ஒரு சதுர மண்டபம். இந்த மண்டபம் வெளிப்புரம் இருந்து
பார்த்தால் அந்த சுவர் ரொம்ப
பழமையானதாகவும் உள்புறம் சென்று பார்த்தால் சற்று புதியதாகவும் இருக்கும்,
உண்மையில் பழைய சுவற்றில், உள்ள சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் மறைக்க உள்புறம்
புதிய சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் எந்த சிற்பவேலைப்பாடுகளும்
இருக்காது.
11. எல்லா கோயில்களிலும்,
கொடிமரம் மற்றும் பலிபீடம், உள்பிரகாரத்தில் தான் இருக்கும், ஆனால் திருப்பதி
கோயிலில் மட்டும் கொடிமரம் மற்றும் பலிபீடம் வெளியே இருக்கும், ஏனெனில் மலை மேலே புத்த
கோயிலில் உள்ளே கொடிமரம் மற்றும் பலிபீடம் வைக்க இடமும் இல்லை வசதியும் இல்லை
இவையெல்லாம்
போக இன்றும் திருப்பதி கோயிலில் உள்ள கடவுளை அந்த ஊர்மக்கள் மலையப்ப சாமி
என்றுதான் அழைக்கிறார்கள், அது ஏன் என்று கேட்டால் எந்த வைணவ பார்ப்பானும் பதில்
சொல்லமாட்டார்கள்.
அந்த
கடவுளுக்கு ஏன் மலையப்ப சாமி என்று பெயர் என்பதற்கு, இலங்கை மாஹாவமிசம் நூல் பதில் சொல்கிறது.
இலங்கையில் புத்த துறவிகள், தாக்கப்பட்டபோது, அவர்கள் ரோகன மலையில் போய்
ஒளிந்துகொள்கின்றனர், அவர்களை காப்பாற்ற குலசேகரன் என்ற ஒரு தமிழ் அரசன் தன் தளபதியான மலையப்பரை அனுப்புகிறான்.
மலையப்பர்
அந்த புத்த துறவிகளுக்கு உதவியதோடு, பின்னர் தானும் ஒரு புத்த துறவியாக
மாறிவிடுகிறார். அவர் இறந்த பின், மன்னன் குலசேகரன் அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு
மலையில் கோயில் கட்டுகிறான். அந்த தளபதியின் மீது கொண்ட அன்பால், அந்த கோயிலின்,
வாசல் படியில் தன்பெயரை பொறிக்கிறான்.
இன்றும்
திருப்பதி கோயிலின் கடவுளின் பெயர் மலையப்பசாமி தான். அந்த கோயிலின் கர்ப்பகிருக
வாயிலில் உள்ள படியின் பெயரும் குலசேகரன் படிதான்.
இத்துடன்
திருப்பதி கோயில் – அதிகம்
தெரியாத உண்மைகளும் வரலாறும் முடிவடைகிறது.
உபரி செய்திகள்
முதலில்
திருப்பதி கோயிலை கைப்பற்றிய ராமானுஜர், இந்த குலசேகரன் படிக்கான காரணம் என்று
சொல்வது, சேரநாட்டு மன்னன் திடவிரதனின்
மகன், குலசேகரன், விஷ்ணு மீது கொண்ட பக்தியில், விஷ்ணு பெயரை சொல்லிக்கொண்டே நாகங்கள் நிறைந்த பானையில் கைவிட்டான் எந்த பாம்பும் அவனை ஒன்றும் செய்யவில்லை
என்று ஒரு கதையை சொல்லிவிட்டு அவன் நினைவாக
அந்த படிகட்டு குலசேகரன் படி என்று அழைக்கப்படுகிறது என்று முடித்தார்.
முதலாம்
குலோத்துங்க சோழன் இறந்தபின் சோழ நாடு திரும்பி, பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலை வைணவ கோயிலாக
மாற்றுகிறார். இந்த ஸ்ரீரங்கம் கோயிலிலும் கர்ப்பகிருக வாயிலில் உள்ள படியின்
பெயரும் குலசேகரன் படி என்று பெயர் வைக்கிறார்.
இவர்கள்
சொல்லும் இந்த குலசேகர ஆழ்வார் எப்போது பிறந்தார் தெரியுமா,
வேறு எப்போது
கிமு.3075-ல் தான், ஆனால் சேரநாட்டை ஆண்டது கி.பி 800-ல்.
இன்றும் திருவிதாங்கூர்
மன்னர்கள் தங்களை இந்த ஆழ்வாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்வார்கள்
இந்த
தொடரில் என்னோடு பயணித்த, ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்







