Thursday, November 16, 2017

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால் 

இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்   

விலை ரூ.200 மட்டுமே 




Wednesday, September 6, 2017

7-ஆம் நூற்றாண்டில் பார்பனர் நடத்திய படுகொலைகள்

கிபி 6 முதல் 7-ஆம் நூற்றாண்டில் பார்பனர் நடத்திய படுகொலைகள் பல பல, அதில் தமிழ் நாட்டில் நடந்த சம்பவம் குறித்து பார்ப்போம்  

கிபி 321 550, வரை வடஇந்தியாவில் பாடலிபுத்திரம் நகரை தலைநகராக கொண்டு குப்தர்கள் ஆண்டார்கள். இவர்கள் தமிழ் நாட்டில் காஞ்சி வரை கூட படை எடுத்து வந்தார்கள். ஸ்ரீகுப்தன் தொடங்கி ஸ்கன்தகுப்தன்  சுமார் 7 மன்னர்கள் சிறப்பானவர்கள் அவர்களுக்கு பின் அதிக சிறப்பு இல்லாத சுமார் 8 குப்தர்கள் ஆண்டார்கள்,


கிபி 480 முதல் 550 வரை தொரமணன் மற்றும் அவனது மகன் மிஹிரகுலன்(சீன வம்சாவழியினர்) என்ற இரு ஹுன இனத்தவர்களின் சுமார் 70 ஆண்டுகள் தொடர்ச்சியான படையெடுப்புகளில் குப்தர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது  


இந்த கால கட்டத்தில் வடஇந்தியா 90% மேல் இந்து மயம் ஆக்கப்பட்டது, மிஹிரகுலன் என்ற சீன வம்சாவழி வந்தவனை சத்திரியன் ஆக்கி பார்பனர் வடஇந்தியாவில் புத்த கோயில்களை அழித்த வரலாறும் உண்டு       

இதன் தொடர்ச்சியாக இந்த கால கட்டத்தில் கங்கை கரையில் மௌகாரிகள், இன்றைய மகாராஷ்டிரத்தில் மைத்ரகர், தற்போதைய ஆந்திர பிரதேசத்தில் சாளுக்கியர்கள் மற்றும் தமிழ் நாட்டில் பல்லவர்கள் தனி அரசர்களாக தலையெடுக்க தொடங்கினர்.


இந்திய வரலாற்றில் கிபி 600 – 650 ஒரு முக்கியமான காலகட்டம், ஒரே நேரத்தில் மூன்று பேர் திறமைசாலியாக இருந்தால் என்ன நடக்குமோ அது நடந்த காலகட்டம், அது மட்டமல்ல சீன யாத்திரிகர் யுவான் சாங் இந்தியாவில் பயணம் செய்த காலகட்டமும் இதுதான்.
1.    

  1. வடக்கே கன்னோஜ் நகரை தலைநகராக கொண்ட மௌகாரிகள் வழி வந்த ஹர்ஷவர்தன் பலம் பொருந்தியிருந்தான், இவன் முதலில் பௌத்தனாக இருந்து பின் வைஷ்ணவ மதம் மாறியவன்
  2. மத்தியில் வாதாபி நகரை தலைநகராக கொண்ட சாளுக்கியர்  வழி வந்த இரண்டாம் புலிகேசி பலம் பொருந்தியிருந்தான், இவன்  பௌத்த மதம் சேர்ந்தவன்
  3. தெற்கே  காஞ்சி நகரை தலைநகராக கொண்ட பல்லவர்கள் வழி வந்த மகேந்திரபல்லவன் பலம் பொருந்தியிருந்தான்  இவன் முதலில் சமண மதத்தில் இருந்து பின் சைவ மதம் மாறியவன்       

இந்த காலகட்டமே பல மன்னர்கள் தற்போதைய இந்து மதத்திற்கு மாறிய காலம். பௌத்தம் மற்றும் சமணம் அழியத்தொடங்கிய காலம். 

அன்றைய சூழ்நிலை மூவருமே தங்கள் பகுதிகளை மேற்கொண்டு விரிவாக்க முடியாமல் நெருக்கடியை கொடுத்தது,
1.       ஹர்ஷவர்தனால் வடக்கே இமயம் தாண்ட முடியவில்லை, தெற்கே புலிகேசியை தாண்ட முடியவில்லை
2.       புலிகேசியால் வடக்கே ஹர்ஷவர்தனை தாண்ட முடியவில்லை, தெற்கே மகேந்திரபல்லவனை தாண்ட முடியவில்லை
3.       மகேந்திரபல்லவனால் வடக்கே புலிகேசியை தாண்ட முடியவில்லை தெற்கே கடல் தாண்ட முடியவில்லை

இந்த மூவரில் அதிகஅளவில் ஆர்வமும் முயற்சியும் உடையவன், இரண்டாம் புலிகேசி என்று தான் சொல்லவேண்டும்.

அவன் தான் முதலில் பல்லவர்கள் மீது படை எடுத்து வந்தான், காஞ்சி நகரில் இருந்து சுமார் 25கிமி தூரத்தில் உள்ள புள்ளலூர் என்ற இடத்தில் இரண்டாம் புலிகேசிக்கும் மகேந்திரபல்லவனுக்கும்  மிகப்பெரிய போர், 

இதில் பல்லவன் படைகள் தோல்வி அடைந்து காஞ்சி நகருக்குள் தஞ்சம் அடைந்தது காஞ்சி கோட்டையை முற்றுகை இட்ட புலிகேசி, படையின் மற்றுமொரு பிரிவுடன் பாண்டிய நாடு வரை சென்றான், அங்கே ஜயந்தவர்ம பாண்டியனை வென்றான். இதில் புலிகேசி செய்த தவறு என்னவென்றால் அவன் முற்றுகை இட்ட காலம் நல்ல கோடை காலம், காஞ்சியில் கோடையில் இன்றும் தண்ணீருக்கு திண்டாட்டம் தான், அதனால் இதை வெற்றி என்றோ தோல்வி என்றோ சொல்லமுடியாத நிலையில் ஊர் திரும்பினான்.


சரி தெற்கே சரிவரவில்லை இப்பொது வடக்கே சென்றால் என்ன என்று நர்மதை நதிக்கரையில் ஹர்ஷவர்த்தனுடன் போர், இந்த போரில் ஹர்ஷவர்த்தனின் யானை படைகள் பெரும் அளவில் சேதம் அடைந்தாலும் இதையும் பெரும் வெற்றி என்று சொல்ல முடியாது, இருவரும் அமைதி ஒப்பந்தம் போட்டு கொண்டு ஊர் திரும்பினர்.

சிலகாலத்துக்கு பிறகு சும்மா இல்லாமல், ஏற்கனவே கோட்டையில் ஒளிந்து கொண்டவர்கள் தானே பல்லவர்கள், அதிலும் தற்போது மகேந்திரபல்லவனின் மகன் சிறுவயதுடைய நரசிம்மன் தானே அரசன் இப்போது எளிதில் வென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் பல்லவ நாட்டின் மீது படை எடுக்கிறான் இரண்டாம் புலிகேசி.


அது தான் அவன் செய்த மிகப்பெரிய தவறு, காஞ்சிக்கு கிழக்கே மணிமங்கலத்தில் நடந்த போரில் புலிகேசியின் படைகள் நரசிம்மனால் அடித்து விரட்டப்படுகிறது.

இந்த வெற்றியால் உந்தப்பட்ட நரசிம்மபல்லவன், ஒரு பெரும் படை திரட்டுகிறான், அருகில் இருந்த எல்லா குறுநிலமன்னர்களின் உதவியையும் நாடுகிறான், பிற்காலத்தில் சோழர்கள் என அறியப்பட்ட வேளிர்கள், சிங்களத்தில் தன் அரசுரிமைக்காக போராடிய மானவர்மன், பாண்டியன் சுந்தர பாண்டியன் ஆகியோர் இதில் அடங்கும். இந்த சுந்தர பாண்டியன் பற்றியது தான் நாம் இன்று பார்க்கும் வரலாறு.


இப்படி பல படைகளை கழுகுமலையில் திரட்டிய நரசிம்மபல்லவன், சாளுக்கியர் தேசம் நோக்கி படையெடுத்து சென்று இறுதியில் அவர்களது தலைநகரான வாதாபியை எரித்து சாம்பாலாக்கி தான் திரும்புகிறான்.

ஆனால் இந்த படையெடுப்பில் சுந்தர பாண்டியனின் படைகளை எடுத்துக்கொண்ட நரசிம்மன், சுந்தர பாண்டியனை தன் நாட்டிலேயே இருந்துகொள்ளும்படி சொல்கிறான் ஏனெனில், பாண்டியன் அப்போது தான் திருமணம் செய்து கொண்டவன்.

இந்த சுந்தர பாண்டியனின் முழு பெயர் அரிகேசரி பாராங்குச மாறவர்மன், இவன் சமண மதத்தை சேர்ந்தவன், இவன் பார்வைக்கு மிக அழகானவன் என்பதால் சமணர்கள் இவனை சுந்தரபாண்டியன் என்று அழைப்பார்கள், இவன் மிக  உயரமாகவும் இருப்பான், உயரம் அதிகம் உள்ளவர்கள், மற்றவர்களை பார்க்க பேச எப்போதும் சற்று குனிந்த நிலையில் இருப்பார்கள் அதனால் பார்பனர்கள் இவனுக்கு வைத்த பெயர் கூன்பாண்டியன்.

இவன் திருமண செய்த பெண் வேளிர் குலத்தை சேர்ந்த மங்கையர்க்கரசி என்ற சோழவம்ச இளவரசி, இவள் பாண்டியனை திருமணம் செய்துகொண்ட போது வேளிர் மன்னனின் மந்திரியின் மகனான குலச்சிறை என்பவனும் பாண்டிய நாடு வருகிறான், பாண்டியன் இந்த குலச்சிறையை தன் மந்திரிகளில் ஒருவன் ஆக்குகிறான்.

சுந்தர பாண்டியன் சமண மதத்தில் இருந்தாலும், மங்கையர்க்கரசி, மற்றும் அவள் தோழன் குலச்சிறை இருவரும் சைவ சமயத்தில் தொடர எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. உலகிலேயே திருமணம் ஆன இளவரசிக்கு மந்திரி மகனை துணையாக அனுப்பிய வரலாறு நான் வேறு எங்கும் படித்ததில்லை.

இந்த காலகட்டத்தில் ஞானசம்பந்தன் என்ற பார்பனன், மதுரைக்கு வருகிறான், ஞானசம்பந்தனின் மதம் பரப்பும் வேலைகளை பற்றி அறிந்த சுந்தரபாண்டியன் அவனை மதுரைக்கு உள்ளே வர அனுமதி மறுத்துவிடுகிறான். ஞானசம்பந்தனை குலச்சிறை தனியே சந்தித்து என்ன செய்வது என்று கேட்க ஒரு சிறு குளிகையை அவனிடம் கொடுத்து, இதை   மன்னனின் உணவில் கலந்துவிடு அவரது மனதில் மாற்றம் வரும் என்கிறான். குலச்சிறையும் மங்கையற்கரசியின் துணையுடன் அப்படியே செய்கிறான்      


அது நாள் வரை நல்ல உடல் நலத்துடன் இருந்த பாண்டியன், திடீரென்று வெப்பு நோய் தாக்கி தீராத வயிற்று வலியால் துடிக்கிறான், உடனிருந்த சமண மருத்துவர்கள் ஒவ்வொரு மருந்தாக கொடுத்து பார்க்க ஒன்றும் உடனடியாக வேலை செய்யவில்லை. விஷம் எது என்று அறிந்தால் தானே அதை முறிக்கும் சரியான மருந்தை கொடுக்க முடியும்  


இந்த நேரத்தில் குலச்சிறையும் மங்கையர்கரசியும், ஞானசம்பந்தர் மந்திரத்தால் அற்புதம் செய்வார் அவரை ஊருக்குள் வர அனுமதி கொடுங்கள் என தொடர்ந்து வற்புறுத்த, எப்படியோ வயிற்று வலி தீர்ந்தால் போதும் என்ற நிலையில் இருந்த பாண்டியன் அனுமதி கொடுக்கிறான்.

அரண்மனை வந்த ஞான சம்பந்தன், மன்னன் சைவ சமயம் மாறுவதற்கு ஒப்புகொண்டால் சிவனின் அருளால் நோயை குணப்படுத்த முடியும் என்கிறான், மன்னனும் ஒப்புகொள்ள, மன்னனுக்கு சிறிது திருநீரை தண்ணீரில் கரைத்து குடிக்க கொடுத்து,   


மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே.

என்ற திருஆலவாய் – திருநீற்றுப்பதிகம் பாடிமுடித்தவுடன் மன்னனின் வெப்பு நோய் மறைகிறது. விஷம் கொடுத்தவனுக்கு தானே முறிக்கும் மருந்து எது என்று தெரியும்.

மன்னன் சைவ சமயம் மாறியவுடன், ஞான சம்பந்தன் அரசனே உங்கள் சமண மதத்தவர் போற்றும் அருகதேவன் பெரியவனா அல்லது சிவன் பெரியவனா என்று போட்டி வைத்து பார்ப்போம், தோற்றவர்களை கழுவில் ஏற்றி கொல்லவேண்டும் என்று சவால் விடுகிறான்.

மறுநாள் சமண துறவிகள், ஞான சம்பந்தனுடன் வாதம் செய்வதற்காக எல்லா சமண மத நூல்களையும் எடுத்து கொண்டு தயாராய் வந்தனர். அப்போது அங்கு வந்த ஞான சம்பந்தன் சொன்ன போட்டி என்ன தெரியுமா? வாதம் செய்வது அல்ல போட்டி. அவன் சொன்னது வேறு இரண்டு போட்டிகள்

போட்டி – 1
ஞான சம்பந்தன் ஒரு ஓலையில் சிவனை பற்றி பாடல் எழுதி நெருப்புக்குள்  நுழைத்து காட்டவேண்டும் அதே போல சமணர்கள் அருகதேவனை பற்றி பாடல் எழுதி ஓலையை நெருப்புக்குள் நுழைத்து காட்டவேண்டும் யார் எழுதிய ஓலை நெருப்பில் எரியாமல் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்     
          
போட்டி – 2
ஞான சம்பந்தன் ஒரு ஓலையில் சிவனை பற்றி பாடல் எழுதி நீரில் நுழைத்து காட்டவேண்டும் அதே போல சமணர்கள் அருகதேவனை பற்றி பாடல் எழுதி ஓலையை நீரில் நுழைத்து காட்டவேண்டும் யார் எழுதிய ஓலை நீரில் நனையாது  இருக்கிறது என்று பார்க்க வேண்டும்               

அறிவுக்கு ஒவ்வாத இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று சமணர்கள் மறுத்தாலும், விடாப்பிடியாக, ஞானசம்பந்தன், தான் ஏற்கனவே கொண்டு வந்த ஓலையில் ஒன்றை நெருப்பில் நுழைத்து காட்ட அது நெருப்பில் எரியவில்லை. மீண்டும் ஏற்கனவே கொண்டு வந்த வேறு ஒரு  ஓலையில் ஒன்றை நீரில் நுழைத்து காட்ட அது நீரில் நனையவில்லை.


இங்கே ஞான சம்பந்தன் செய்தது அற்புதமெல்லாம் ஒன்றும் இல்லை, கெமிக்கல்கள் விற்கும் கடைகளில் போராக்ஸ் என்ற வெள்ளை நிற பொடியை வாங்கி, நீரில் கட்டியாக கரைத்து அதில் ஒரு காகிதத்தை நன்றாக நனைத்து பின் உலரவைத்து கொள்ளுங்கள், அதே போல கடைகளில் விற்கும் ஆலம் என்ற கரைசலை வாங்கி நீர் சேர்த்து கொதிக்கவைத்து அதில் ஒரு காகிதத்தை நன்றாக நனைத்து பின் உலரவைத்து கொள்ளுங்கள்.


இரண்டு காகிதத்திலும் உங்கள் பெயரை எழுதி வைத்து கொண்டு பின் யாராவது சில ஏமாளிகளை கூப்பிட்டு, முதல் காகிதத்தை நெருப்பில் நுழைத்து காட்டுங்கள், இரண்டாவது காகிதத்தை நீருக்குள் நுழைத்து காட்டுங்கள், உங்கள் அற்புத சக்தியில் மயங்கி அவர்கள் உங்களுக்கு சீடராக கூடும், இந்த வித்தையை செய்யும் போது காவி உடை அணிதல் இந்த வித்தைக்கு மேலும் சிறப்பு தரும். அப்படியே ஆசிரமம், மடம் இறுதியில் ஜெயில் என்று படிப்படியாக முன்னேறி செல்லுங்கள்.
       
ஆகவே போட்டியில் தானே வென்றதாக அறிவித்து கொண்ட ஞானசம்பந்த பார்பான், மதுரையில் இருந்த சமணர்கள் சுமார் 8000 பேரை கழுவில் ஏற்றி கொன்றான் கழுவில் ஏற்றுவது எப்படி என்று படத்தில் உள்ளது.  


அதே காலத்தில் இந்தியாவில் இருந்த யவான் சாங் தன் புத்தகத்தில், சமணர்களை கொல்ல பாண்டிய மன்னனை வெகுவாக வற்புறுத்திய ஒரு இந்து இராணியை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பார்பனர்கள் சமணர்களை அதிகஅளவில் அடையாளம் காட்டி கொன்றதில் இருந்து தான்

“வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”

என்ற சகுனம் பார்க்கும் முறையே ஏற்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அந்த காலத்தில் ஒரு சமணர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிரில் பார்பானை பார்த்தால் அவன் வீடு திருப்ப முடியாது, பின் தொடர்ந்து வரும் பார்பான் எங்காவது ஒரு வீரனிடம் அவனை சமணன் என்று அடையாளம் காட்டி அவன் கைது செய்யப்பட்டு கழுவில் ஏற்றப்படுவான்,  பின் பார்ப்பானே தன்னை பற்றி கேவலமாக ஒரு பழமொழியை சொல்லிக்கொள்வானா.  


சமணம் பார்த்தல் என்ற வார்த்தையே பிற்காலத்தில் சகுனம் பார்த்தல் என்று மாற்றம் அடைந்திருக்கும், இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் வயதானோர் சமணம் பார்த்தல் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை பார்த்துள்ளேன்.


இதே ஞானசம்பந்தன், தன் உடன் மதம் பரப்ப வந்த நாவுக்கரசரை, பார்பனர் அல்ல என்பதால் அவரை தன் பல்லக்கை தூக்கும்படி செய்தது, செல்லும் வழியில் வயாதான முதியவர் நாவுகரசறை காலால் எட்டி உதைத்தது, நாவுக்கரசர் கடைசி காலத்தில் சமண மதம் திரும்பியது போன்ற சம்பவங்களை வேறு ஒரு பதிவில் காண்போம்      


ஆக நரசிம்மபல்லவன்,  சுந்தர பாண்டியனை வாதாபிக்கு சண்டை போட  அழைத்து சென்றிருந்தால், 63 நாயன்மார்களில் மூன்று பேர் குறைந்திருப்பார்கள்

Monday, September 4, 2017

நீட் எனும் பிசாசு



நீட் என்னும் இந்த பிசாசு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் வாசல் வந்து பல குழந்தைகளின் கனவில் மண்ணை போட்டதும் அல்லாமல், ஒரு உயிர் பழியும் வாங்கிவிட்டது.


டில்லி சர்வாதிகாரிகளுக்கு நம் பலம் தெரியவில்லை.
  1.        இந்தியாவிலேயே அதிக சதவீகித மாணவர்கள் +2 வரை பள்ளி கல்வியில் இறுதி வரை கொண்டு வருவது நமது தமிழக கல்வி முறை மட்டுமே
  2.            கடந்த ஆண்டு +2 தேர்வு எழுதியோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 9 லட்சம், அதில் 92.5% பேர் தேர்ச்சி பெற்றவர்கள் 
  3.            1813 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றவர்கள் அதில் 292 அரசு பள்ளிகளும் அடங்கும் 
  4.            1171 மாணவர்கள் 1180 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்  
  5.            கடந்த ஆண்டு 200/200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10,000 – காமர்ஸ் எகானாமிக்ஸ் உட்பட
  6.            கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியோர் 83,859 பேர் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 32,000 பேர்கள் மட்டுமே


எங்கள் பிள்ளைகள் எதிலும் சோடை போனவர்கள் அல்ல, இந்த நீட் பிசாசு வராது வராது என்று அரசியல் சாக்கடைகள் சொன்னதை நம்பி ஏமாந்தவர்கள் தானே தவிர எந்த விதத்திலும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.


ஆயுதம் இன்றி பயிற்சி இன்றி சண்டை போடு என்றால் என்ன செய்வார்கள், நம் பிள்ளைகள்.


நீட்-ஐ எதிர்த்து இந்த பிள்ளைகளுக்கு ஆயுதமும் பயிற்சியும், கொடுப்போம்.


சில அரசு பள்ளி ஆசிரியர்களிடம் பேசியுள்ளேன், அவர்கள் நீட் வினாவிடைகளை தமிழில் மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டுள்ளார்கள். சுமார் 10,000 வினாவிடைகள் தயார் செய்ய உத்தேசம்  


NEET  FREE  TRAINING.COM பெயரில் ஒரு இலவச ஆன்லைன் பயிற்சி வலைத்தளம் அமைப்பது என்று முடிவு செய்துள்ளேன். இந்த வலைதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு வழிகளில் பயிற்சி கொடுக்கப்படும்.


இந்த வலைதளத்தில் தமிழ் நாட்டு மாணவர்கள் மட்டுமே சேர்த்துகொள்ளப்படுவார்கள். முழு சேவைகளும் வசதிகளும் இலவசமாக கொடுக்கப்படும்.


அடுத்த ஆண்டில் அவர்கள் நீட் வைக்கட்டும் நம் பிள்ளைகள் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டு அதில் 10,000 பேர் முதல் மதிப்பெண்கள் 
பெற்று தமிழ் நாட்டு கல்லூரிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநில 
கல்லூரிகளையும் இடம் பிடித்து, இன்னும் இரண்டு ஆண்டுகளில் நீட் தேர்வே வேண்டவே வேண்டாம் என்று அவர்களை ஓட வைப்போம்.


ஆனால் இதற்கு பணம் வேண்டுமே என்ன செய்வது என்று சிந்தித்த போது, ஒரு யோசனை தோன்றியது.


ஏற்கனவே பல நண்பர்கள், நமது “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்: தொடரை புத்தகமாக கொண்டு வாருங்கள் என்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்              


தற்போது ஏற்கனவே எழுதியவை, மற்றும் இந்த மாதம் எழுத இருக்கும் ஆதிசங்கரன் பற்றிய பதிவுகளையும் சேர்த்தால், சுமார் 25 அத்தியாயங்கள் வருகிறது. இதை புத்தகம் ஆக்க விசாரித்த போது, செலவு ஒரு புத்தகத்துக்கு ரூ.60 ஆகும் என்றார்கள்.


இந்த புத்தகத்தை, ஒரு பிரதி ரூ.160, என்ற விலையில் தருகிறேன். அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடுகிறேன். இன்றே முன் பதிவு செய்யுங்கள்,


இதில் ஒரு புத்தகத்துக்கு ரூ.100 லாபம் கிடைக்கும் அதை மேலே சொன்ன இலவச நீட் பயிற்சி வலைதளத்துக்காகும் செலவுக்கு பயன்படுத்துவோம்.


நீங்கள் புத்தகம் வாங்குவதாக நினைக்க வேண்டாம், இலவச நீட் பயிற்சி வலைதளம் உருவாக்க கொடுக்கும் நன்கொடையாக நினைத்து கொடுங்கள்,


உங்கள் நன்கொடைகள் ரூ.160-ன் மடங்குகளாக இருக்கட்டும், உதாரணமாக ரூ.1600 நன்கொடை தரும் நண்பருக்கு 10 பிரதிகள் புத்தகம் அனுப்பிவைக்கிறேன் அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம். குறைந்த பட்சமாக ரூ.160 நன்கொடை அளிக்கும் நண்பர்களுக்கு 1 பிரதி புத்தகம் அனுப்பிவைக்கிறேன்                               

நீங்கள் கொடுக்கும் ரூ.160 நீட்-க்கு, எதிராக நாம் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு பெரும் உதவியாக நிச்சயம் இருக்கும், அதற்கு நேரடி பலனாக உங்களுக்கு புத்தகமும் கிடைக்கும், அதனால் நான் இந்த பணத்தை சேகரித்து கொண்டு ஓடிவிடிவேன் என்று எண்ண வேண்டாம்     


நன்கொடை வழங்கி புத்தகங்களை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்



இதை மேலும் சரியான முறையில் செய்ய நண்பர்களின் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன், வாருங்கள் ஊர்கூடி நீட்-ஐ எதிர் கொள்ள நம் பிள்ளைகளை தயார் செய்வோம்


   

Friday, September 1, 2017

ராஜராஜ சோழனின் பிரான்ஸ் மற்றும் சீன தேச தொடர்புகள்

சிலநாட்களுக்கு முன் ஒரு யூ-டியுப் வீடியோ ஒன்றை பார்த்து பொறி கலங்கிவிட்டது எனக்கு. அந்த லிங்க் இதோ https://www.youtube.com/watch?v=lvGEyCXvV7A

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயிலில், ஒரு ஐரோப்பியனின் சிலை, தொப்பி அணிந்து, காலர் வைத்த சட்டை போட்டுக்கொண்டு இருக்கிறது பாருங்கள், அது மட்டுமல்ல, மேலும் ஒரு நீண்ட மீசையுடன் ஒரு சீனதேசத்து மனிதரின் சிலையும் பாருங்கள்.

வேத சாஸ்திரப்படி, கோயில் கோபுரத்தில் மனிதர்கள் சிலையை வைக்க கூடாது, அரசர்களின் சிலை மற்றும் தெய்வங்களின் சிலையை மட்டுமே வைக்கலாம்.

அந்த ஐரோப்பியனின் சிலை அதே காலகட்டத்தில் வாழ்ந்த பிரான்ஸ் தேச மன்னனான இரண்டாம் ராபர்ட்டின் சிலை, அந்த சீன தேசத்தவர் டாங் அரசவம்சத்தி சேர்ந்த சீன மன்னரின் சிலை.

கிமு.1000 வருடத்திலேயே மேற்கிலும் கிழக்கிலும் கடல் கடந்து தமிழனின் தொடர்புகளை பாருங்கள் என்று கதறியிருந்தார்.

சோழர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர்கள் யாருமே ஐரோப்பிய தேசங்கள் பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை, என்பதே வரலாற்று உண்மை, ஏனெனில் அந்த காலகட்டமான கிபி1095-1291-ல் மொத்த ஐரோப்பிய மன்னர்களும் போப் ஆண்டவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு, சுமார் 300 வருன்டங்கள் சிலவை போர்களில் இடுபட்டு கொண்டிருந்த காலகட்டம் அது. பல ஐரோப்பிய மன்னர்கள் சோத்துக்கே சிங்கி அடித்துகொண்டிருந்த காலம் அது.

அந்த காலகட்டத்தில் பல மன்னர்கள், இப்போது இந்தியாவில் நடந்த டீமானிடைசேசனை ஒவ்வொரு வருடமும் செய்து கொண்டிருந்தார்கள் சிலவை போர் செலவை ஈடுகட்ட. அதாவது ஒவ்வொரு வருட முடிவிலும்  மக்கள் தங்களிடம் உள்ள எல்லா தங்க, வெள்ளி, செம்பு காசுகளையும் கொண்டுவந்து அரசனிடம் கொடுத்துவிட்டு புதிய காசுகளை பெற்றுக்கொள்ளவேண்டும், புதிய காசு பழைய காசுகளை விட 10% எடை குறைவாக இருக்கும்.

இந்த சிலுவைபோரில் இருந்து தப்பிக்கவே இங்கிலாந்து முதலில் போப்பை எதிர்த்தனர்

இப்படி ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சிலுவைபோரில் சீரழிந்து கொண்டிருக்கும் போது ராஜராஜன் ஏன் அங்கே போய் வியாபாரத் தொடர்பை தேடப்போகிறான்.

அதுவும் போக பிரான்ஸ் மன்னர் ஏன் தொப்பி அணியவேண்டும் அவர் கிரீடம் அல்லவா அணிந்திருப்பார், ஒருவேளை சிலை செய்ய தெரிந்த ராஜராஜனின் சிற்பிகளுக்கு ஒரு மண்ணின் கிரீடம் செதுக்கத் தெரியவில்லையோ, என்று மண்டை குழம்பி  சித்தம் கலங்கி போனேன்
சரி என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை என்று பலதளங்களில் தேடிப்பார்த்தேன், என்ன செய்வது தமிழன் செய்த பாவம் இந்த பிரான்ஸ் தொடர்பு பற்றி எங்குமே இல்லை.

பின்னர் தஞ்சையில் உள்ள எனக்கு அண்ணன் போன்ற ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன். அவரது வழிகாட்டலில் பிறகு தான் தெரிந்தது, நான் தேடிய வருடமான கிபி1000 என்பது தவறு, கிபி1800-ல் தேடவேண்டும் என்று தெரிந்தது.

கடைசியில் விஷயம் வேறு ஒன்றும் இல்லை. கிபி.1800-ல் மராட்டிய அரசர்கள் தஞ்சையை ஆண்டபோது, அப்போதைய மராட்டிய அரசன் ராஜா இரண்டாம் சரபோஜியின் காலத்தில், கிழக்கிந்திய கம்பனியில் பணிபுரிந்த கர்னல் வில்லியம் லாம்டன் என்பவர் இருந்தார், மொத்த இந்தியாவையும் Trignometric Survey, என்ற முறையில் அளந்து இந்திய வரைபடத்தை உருவாக்கவேண்டும் என்பதே அவரது பணி. அவர் தஞ்சை பகுதியில் சர்வே செய்யவந்த போது. தியோடலைட்டு, என்ற சர்வே கருவியை பொருத்த சரியான உயரமான இடம் எதுவும் கிடைக்கவில்லை. தஞ்சை பகுதியே மொத்தமாக ஒரு சமதள பகுதி. இறுதியாக, தஞ்சை பெரியகோயிலின் கோபுரமே பொருத்தமான இடம் என்று தேர்வு செய்கிறார்.

அந்த கோபுரத்தில் இருந்து சுற்றிவுள்ள எல்லா ஊர்கள் மற்றும் கிராமங்களை எல்லாம் துல்லியமாக தனது வரிபடத்தில் குறிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.

அது எப்படி டெலஸ்கோப் போன்ற ஒருகருவியை வைத்து, உயரமான ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு தொலைவில்  உள்ள ஊர்களை ஒரு வரைபடத்தில் சரியான தூரத்தை அளவிடமுடியும் என்று கேட்பவர்கள் 10ஆம் வகுப்பில் கணிதப்பாடத்தில் திரிகோணமிதி சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம், மீண்டும் போய் பத்தாம் வகுப்பு கணிதபாடத்தை நன்றாக படிக்கவும்.

கர்னல் வில்லியம் லாம்டன், இந்த வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, சுமார் அரை டன் எடையுள்ள அவரது தியோடலைட்டு, என்ற சர்வே கருவி மேலிருந்து கீழ விழுந்து, கோபுரத்தின் ஒரு பகுதியை சிதைத்து விட்டு உடைகிறது. தனது கருவியை சீர்செய்ய அவருக்கு பலமாதங்கள் ஆகிறது. அந்த காலகட்டத்தில் உள்ளூர் சிற்பிகளின் துணையுடன் அவரது சொந்த செலவில் கோபுரத்தையும் சீர்செய்கிறார், அப்போது தான் இந்த தொப்பிக்காரன் சிலை தஞ்சை பெரியகோயிலில் இடம்பெறுகிறது.

இந்த சம்பவத்தை பற்றி ஜூலை 1, 1970-ல் வெளியான Engineers Journal-ல் நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இன்றைய இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கிதந்த, கர்னல் வில்லியம் லாம்டன் 1823-ல் இறந்தபிறகு வார்தாவில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட நினைவிடம் இன்றும் உள்ளது.

என்னை கேட்டால் அந்த நினைவிடத்தைவிட, தஞ்சை கோயிலில் உள்ள சிலையே இந்திய நாட்டுக்கு அவர் செய்த பணிக்கான சிறப்பான அடையாளம்.

ஐரோப்பியன் சிலை பற்றிய விளக்கம் சரி, அந்த சீனதேசத்தவரின் சிலை யாரென்று கேட்டால், தஞ்சை பெரிய கோயிலின் லிங்கபீடத்தை அமைத்து கொடுத்த போகசித்தர் சிலைதான் அது என்று சொல்கிறார்கள், அது பற்றிய சரியான ஆவணங்கள் எனக்கு கிடைக்கவில்லை, நண்பர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தியின் உதவியை நாடுகிறேன்.                                 

இதை பற்றி பல தளங்களில் தேடும்போது எனக்கு பல அதிர்ச்சிகள் ஏற்பட்டது, அதில் உச்சகட்ட கொடுமை, ஒரு வலைதளத்தில், தஞ்சை கோயிலின் மேலே உள்ள 80 டன் எடையுள்ள கல்லை, ராஜராஜனின் குருவாக இருந்த   கருவூர்சித்தர், தனது அஷ்டமாசித்திகளில் ஒன்றான இலகிமா என்ற சக்தியை பயன்படுத்தி அந்த கல்லை பஞ்சை விட எடை குறைந்ததாக மாற்றி மேலே பறக்கவிட்டு, கோபுரத்தின் உச்சியில் அமரும்படி செய்தார் என்று போட்டிருந்தார்கள்.  நான் படித்த இயற்பியல் முதுகலை புத்தகங்கள் எதிலுமே 80 டன் பஞ்சுக்கு எடையே இருக்காது என்று போடவில்லை, என்னசெய்வது அந்த புத்தங்கள் எழுதிய இயற்பியல் அறிஞர்கள் யாரும் வேத அறிவியல் படிக்கவில்லையே


அந்த கோயில் கட்ட ஏலியன்கள் ராஜராஜனுக்கு உதவினர் என்று மட்டும் தான் இன்னும் யாரும் பதிவு போடவில்லை    

Tuesday, August 29, 2017

தமிழ் புத்தாண்டு - யுகங்கள் தோறும் பார்பன புரட்டு


பார்பன புரட்டு, ஜெயலலிதாவின் ஏமாற்றுவேலை என்று அவர் இறந்த பின் எழுதுகிறாயே அவ்வளவுதான் உன் வீரமா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு புதிய பதிவு அல்ல, 2012-முதல் சுமார் 5முறை ஏற்கனவே போட்ட பதிவு தான் இது.
இன்னும் சொல்லப்போனால் நமது முகநூல் நண்பர் H Umar Farook , ஒவ்வொரு சித்திரை ஒன்றாம் தேதியும் இந்த பதிவை மறுபதிவு செய்ய சொல்லி நினைவூட்டுவார்,
யாரும் அதிகம் கவனிக்காத அந்த பழைய பதிவின் லிங்க் இதோ
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்றும் சொல்லும் நாட்காட்டி முறையை, கலியுக வருடம், விக்கிரம (அ) சாலிவாகன ஆண்டு என்று சொல்லுவார்கள். அது தான் இந்து மத புராணமான ஓரினகலப்பில் மகாவிஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்கள் என்று சொல்லப்படும் கதை.
இந்த அறிவுக்கு ஒவ்வாத கதைகள் தேவையில்லை என்று பாவேந்தர் முதல் மறைமலையடிககள் வரை பல தமிழ் அறிஞர்கள், அதற்கு பதிலாக தமிழர்க்கு தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டு திருவள்ளுவரின் பிறந்த வருடத்தை, சற்றே ஏறக்குறைய ஏசு பிறப்பதற்கு 30 வருடம் என்று கணக்கில் கொண்டு ஒரு புது நாட்காட்டி முறையை கொண்டு வரவேண்டும் என்று போராடினார்கள்.
இறுதியில் 1971-ல், கருணாநிதி அவர்களின் ஆட்சியில், திருவள்ளுவர் ஆண்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான நாட்காட்டி என்று அரசானை பிறப்பித்து, அதனை சட்டமாக்கினார்.
அன்றிலிருந்து, திருவள்ளுவர் ஆண்டே தமிழத்தின் அதிகாரபூர்வமான நாட்காட்டியாக இருந்து வருகிறது.
அதன் பின் இந்தியாவில் 1975-ல் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டு, திமுகா-வின் ஆட்சி கலைக்கப்படுகிறது.
அதன் பின் 1989-ல் 9-தாவது சட்டமன்ற தேர்தலில் தான் திமுக ஆட்சிக்கு வருகிறது. இடையில் எம்ஜியாரின் ஆட்சிகாலத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பற்றிய அதிமுகா அரசு கவலை பாடவும் இல்லை.
பார்பனர் உதவியில் மறுபடியும் 1977-க்கு பிறகு சித்திரை ஒன்றாம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று எல்லா கோயில்களின் மூலம் பஜனைகள் பூசைகள் செய்யப்பட்டு ஒரு அரசானை காற்றில் பார்க்க விடப்படுகிறது.
1989-ல் ஆட்சிக்கு வந்தாலும் திமுக அரசு ராசீவ்காந்தி கொலையோடு சம்பந்தம் இல்லாமல் சம்பந்தப் படுத்தி அந்த ஆட்சி கலைக்கப்படுகிறது.
பின் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறார், 2000-ல் அதிமுக ஆட்சி, பின்னர் மீண்டும் 2006-ல் திமுகா ஆட்சிக்கு வரும் போது தான் மீண்டும் இந்த தமிழ் புத்தாண்டு பிரச்சனை வெளியே வந்து,
அந்த ஆட்சி காலத்தில் இனி திருவள்ளுவர் ஆண்டே எல்லா நிலைகளிலும் பயன் படுத்தப்படும் என்று மீண்டும் அரசானை பிறபிக்கப்படுகிறது.
அதற்கு பின் 2011-ல் ஆட்சிக்கு வரும் ஜெயலலிதா இனி திருவள்ளுவர் ஆண்டு செல்லாது, மீண்டும் சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்.
.
1971-ல் கருணாநிதி திருவள்ளுவர் ஆண்டே அதிகாரப்பூர்வமான தமிழக அரசின் நாட்காட்டி என் அறிவித்த நாள் முதல், எல்லா அரசாங்க கோப்புகளிலும், இரண்டு தேதிகள் குறிப்பிடப்படும்,
1. ஒன்று 1582-முதல் உலகம் எங்கும் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் காலேண்டர் எனப்படும் உலக வழக்கில் உள்ள தேதி
2. இரணடாவது தேதி திருவள்ளுவர் ஆண்டு என்ற தமிழர் நாட்காட்டி தேதி
3. அந்த தேதி தை முதல் மார்கழி வரை உள்ள பன்னிரண்டு மாதங்களையும் வருட எண்ணிக்கை கிபி ஆண்டை விட 30 வருடம் அதிகமாகவும் இருக்கும்.
4. உதாரணமாக இந்த ஆண்டு 2017 என்றால் திருவள்ளுவர் ஆண்டு 2047 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது எல்லோரும் அறிந்த வரலாறு, இதில் ஜெயலலிதாவின் புரட்டு என்ன என்று பார்ப்போம்.
2011-ல் திருவள்ளுவர் ஆண்டு செல்லாது இனி தமிழக மக்கள் சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடவேண்டும் என்று அறிவித்த ஜெயலலிதா,
அதன் பின் தான் உயிரடன் இருந்த 2016 வரை அதாவது சுமார் ஆறு ஆண்டுகள், அரசாங்க கோப்புகளில், திருவள்ளுவர் ஆண்டை தான் பயன்படுத்தினார், கலியுக (அ) விக்கிரம (அ) சாலிவாகன ஆண்டு முறையை அரசாங்க கோப்புகளில் பயன்படுத்தவில்லை.
குறைந்த பட்சம் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்துவதை நிறுத்தக் கூடயில்லை.
இப்போது படத்தை பாருங்கள், அதில் இரண்டு அரசாணைகள் உள்ளன, அந்த ஆணைகள் எதைப் பற்றியது என்பது நமக்கு முக்கியமில்லை
இந்த இரண்டு அரசாங்க ஆணைகளில் உள்ள தேதிகளை கவனியுங்கள்
12.01.2012 - தேதி, அதாவது மார்கழி 26, அன்று திருவள்ளுவர் ஆண்டு - 2042
அதே போல
25.01.2012 - தேதி, அதாவது தை 11, அன்று திருவள்ளுவர் ஆண்டு - 2043
அதாவது 15.01.2012, அன்று தை முதல் நாளில், திருவள்ளுவர் ஆண்டு – 2042 முடிந்து திருவள்ளுவர் ஆண்டு – 2043 தொடங்குகிறது.
அதாவது 2012-ல் ஜெயலலிதாவின் தமிழக அரசின் கணக்குப் படி புத்தாண்டு, தை முதல் நாள் தான் வருது.
இப்போது கேள்வி என்னவென்றால்...
"இனி சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு" என்று ஜெயலலிதா வெளியிட்ட அரசானை
1. வேடிக்கைகாக வெளியிடப்பட்டதா?
அல்லது
2. தமிழனை மடையன் இது எல்லாம் அவன் மரமண்டைக்கு புரியாது என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டதா?

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே