Tuesday, August 29, 2017

தமிழ் புத்தாண்டு - யுகங்கள் தோறும் பார்பன புரட்டு


பார்பன புரட்டு, ஜெயலலிதாவின் ஏமாற்றுவேலை என்று அவர் இறந்த பின் எழுதுகிறாயே அவ்வளவுதான் உன் வீரமா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு புதிய பதிவு அல்ல, 2012-முதல் சுமார் 5முறை ஏற்கனவே போட்ட பதிவு தான் இது.
இன்னும் சொல்லப்போனால் நமது முகநூல் நண்பர் H Umar Farook , ஒவ்வொரு சித்திரை ஒன்றாம் தேதியும் இந்த பதிவை மறுபதிவு செய்ய சொல்லி நினைவூட்டுவார்,
யாரும் அதிகம் கவனிக்காத அந்த பழைய பதிவின் லிங்க் இதோ
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்றும் சொல்லும் நாட்காட்டி முறையை, கலியுக வருடம், விக்கிரம (அ) சாலிவாகன ஆண்டு என்று சொல்லுவார்கள். அது தான் இந்து மத புராணமான ஓரினகலப்பில் மகாவிஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்கள் என்று சொல்லப்படும் கதை.
இந்த அறிவுக்கு ஒவ்வாத கதைகள் தேவையில்லை என்று பாவேந்தர் முதல் மறைமலையடிககள் வரை பல தமிழ் அறிஞர்கள், அதற்கு பதிலாக தமிழர்க்கு தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டு திருவள்ளுவரின் பிறந்த வருடத்தை, சற்றே ஏறக்குறைய ஏசு பிறப்பதற்கு 30 வருடம் என்று கணக்கில் கொண்டு ஒரு புது நாட்காட்டி முறையை கொண்டு வரவேண்டும் என்று போராடினார்கள்.
இறுதியில் 1971-ல், கருணாநிதி அவர்களின் ஆட்சியில், திருவள்ளுவர் ஆண்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான நாட்காட்டி என்று அரசானை பிறப்பித்து, அதனை சட்டமாக்கினார்.
அன்றிலிருந்து, திருவள்ளுவர் ஆண்டே தமிழத்தின் அதிகாரபூர்வமான நாட்காட்டியாக இருந்து வருகிறது.
அதன் பின் இந்தியாவில் 1975-ல் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டு, திமுகா-வின் ஆட்சி கலைக்கப்படுகிறது.
அதன் பின் 1989-ல் 9-தாவது சட்டமன்ற தேர்தலில் தான் திமுக ஆட்சிக்கு வருகிறது. இடையில் எம்ஜியாரின் ஆட்சிகாலத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பற்றிய அதிமுகா அரசு கவலை பாடவும் இல்லை.
பார்பனர் உதவியில் மறுபடியும் 1977-க்கு பிறகு சித்திரை ஒன்றாம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று எல்லா கோயில்களின் மூலம் பஜனைகள் பூசைகள் செய்யப்பட்டு ஒரு அரசானை காற்றில் பார்க்க விடப்படுகிறது.
1989-ல் ஆட்சிக்கு வந்தாலும் திமுக அரசு ராசீவ்காந்தி கொலையோடு சம்பந்தம் இல்லாமல் சம்பந்தப் படுத்தி அந்த ஆட்சி கலைக்கப்படுகிறது.
பின் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறார், 2000-ல் அதிமுக ஆட்சி, பின்னர் மீண்டும் 2006-ல் திமுகா ஆட்சிக்கு வரும் போது தான் மீண்டும் இந்த தமிழ் புத்தாண்டு பிரச்சனை வெளியே வந்து,
அந்த ஆட்சி காலத்தில் இனி திருவள்ளுவர் ஆண்டே எல்லா நிலைகளிலும் பயன் படுத்தப்படும் என்று மீண்டும் அரசானை பிறபிக்கப்படுகிறது.
அதற்கு பின் 2011-ல் ஆட்சிக்கு வரும் ஜெயலலிதா இனி திருவள்ளுவர் ஆண்டு செல்லாது, மீண்டும் சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்.
.
1971-ல் கருணாநிதி திருவள்ளுவர் ஆண்டே அதிகாரப்பூர்வமான தமிழக அரசின் நாட்காட்டி என் அறிவித்த நாள் முதல், எல்லா அரசாங்க கோப்புகளிலும், இரண்டு தேதிகள் குறிப்பிடப்படும்,
1. ஒன்று 1582-முதல் உலகம் எங்கும் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் காலேண்டர் எனப்படும் உலக வழக்கில் உள்ள தேதி
2. இரணடாவது தேதி திருவள்ளுவர் ஆண்டு என்ற தமிழர் நாட்காட்டி தேதி
3. அந்த தேதி தை முதல் மார்கழி வரை உள்ள பன்னிரண்டு மாதங்களையும் வருட எண்ணிக்கை கிபி ஆண்டை விட 30 வருடம் அதிகமாகவும் இருக்கும்.
4. உதாரணமாக இந்த ஆண்டு 2017 என்றால் திருவள்ளுவர் ஆண்டு 2047 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது எல்லோரும் அறிந்த வரலாறு, இதில் ஜெயலலிதாவின் புரட்டு என்ன என்று பார்ப்போம்.
2011-ல் திருவள்ளுவர் ஆண்டு செல்லாது இனி தமிழக மக்கள் சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடவேண்டும் என்று அறிவித்த ஜெயலலிதா,
அதன் பின் தான் உயிரடன் இருந்த 2016 வரை அதாவது சுமார் ஆறு ஆண்டுகள், அரசாங்க கோப்புகளில், திருவள்ளுவர் ஆண்டை தான் பயன்படுத்தினார், கலியுக (அ) விக்கிரம (அ) சாலிவாகன ஆண்டு முறையை அரசாங்க கோப்புகளில் பயன்படுத்தவில்லை.
குறைந்த பட்சம் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்துவதை நிறுத்தக் கூடயில்லை.
இப்போது படத்தை பாருங்கள், அதில் இரண்டு அரசாணைகள் உள்ளன, அந்த ஆணைகள் எதைப் பற்றியது என்பது நமக்கு முக்கியமில்லை
இந்த இரண்டு அரசாங்க ஆணைகளில் உள்ள தேதிகளை கவனியுங்கள்
12.01.2012 - தேதி, அதாவது மார்கழி 26, அன்று திருவள்ளுவர் ஆண்டு - 2042
அதே போல
25.01.2012 - தேதி, அதாவது தை 11, அன்று திருவள்ளுவர் ஆண்டு - 2043
அதாவது 15.01.2012, அன்று தை முதல் நாளில், திருவள்ளுவர் ஆண்டு – 2042 முடிந்து திருவள்ளுவர் ஆண்டு – 2043 தொடங்குகிறது.
அதாவது 2012-ல் ஜெயலலிதாவின் தமிழக அரசின் கணக்குப் படி புத்தாண்டு, தை முதல் நாள் தான் வருது.
இப்போது கேள்வி என்னவென்றால்...
"இனி சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு" என்று ஜெயலலிதா வெளியிட்ட அரசானை
1. வேடிக்கைகாக வெளியிடப்பட்டதா?
அல்லது
2. தமிழனை மடையன் இது எல்லாம் அவன் மரமண்டைக்கு புரியாது என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டதா?

Sunday, August 27, 2017

அமரகோசம் - விநாயகர்


இந்த விநாயக சதுர்த்திக்கு வெறும் ஒரு வேடிக்கை பதிவு மட்டுமே போதும் என்று தான் தேவமைந்தன் பிறந்த நாள் பதிவை போட்டேன். இப்போது வேறு வழியில்லை, சீரியசான பதிவு போட்டும் தான் ஆகவேண்டும்

நேற்று பக்தாள் டீமில் உள்ள ஒருவர், பிள்ளையார் ஒன்றும் புத்த கடவுள் அல்ல, என்று காட்டமாக எழுதியிருந்தாராம், வேறு ஒரு நண்பரிடம் ScreenShot வாங்கி தான் பார்த்தேன், நான் அவர் பக்கத்தை பார்க்க முடியாது, நம் மீது அவருக்கு அவ்வளவு அன்பு.

அந்த பதிவில் விநாயகர் புத்த கடவுள் எல்லாம் கிடையாது, நாந்திகளை கேட்டால் அயோத்திதாசர் சொன்னார் என்று சொல்கிறார்கள், அயோத்திதாசர் எந்த துறை வல்லுனரும் கிடையாது, என்றெல்லாம் காட்டமாக எழுதியிருந்தார். பதிவு போட்டவர் எந்த துறை வல்லுநர் என்று அவருக்கே வெளிச்சம், குறைந்தபட்சம் அயோத்திதாசர் எத்தனை நூல்கள் எழுதிஉள்ளார் என்றாவது தெரியுமா என்பதும் தெரியவில்லை

இது போக அருமையாக ஒரு புது வரலாறை வேறு அவர் கண்டுபிடித்திருந்தார்,

புத்த மதம் நகரங்களில் இருந்தது. இந்து மதம் தலைமையிடம் என்று எதுவும் இல்லாமல் கிராமங்களில் இருந்தது, அதனால் தான் இஸ்லாமியர்கள் இந்தியா வந்த போது நகரங்களில் இருந்த புத்த மதம் அழிக்கப்பட்டது, கிராமங்களில் பார்பன பூசாரிகளால் இந்துமதம் அமைதியாக வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது என்று சொல்லிருந்தார். ஒருவேளை சோமநாதபுரம் கோயில் புத்த கோயில் என்பதால் தான் இஸ்லாமியர்கள் 17முறை வந்து இடித்தார்கள் போல

அதற்கு ஒரு ஆங்கில புத்தகத்தை வேறு ஆதாரமாக காட்டியிருந்தார், உண்மையில் அந்த புத்தக ஆசிரியரால் சொல்லப்பட்டது, நாலந்தா ஒரு கல்வி கூடம் என்பது தெரியாமல் வழிபாட்டு இடம் என்று என்று நினைத்து இஸ்லாமியர் இடித்துவிட்டார்கள் என்ற ஒரே ஒரு வரி மட்டும் தான்

இறுதியாக நான்காம் நூற்றாண்டை சேர்ந்த அமரகோசம் என்ற நூல் கணேசனுடைய எட்டு பெயர்களை சொல்கிறது, எனவே கணேசர் பல நூற்றாண்டுகளாக இந்து கடவுளாக தான் இருந்துவருகிறார், அவரை புத்த மத்ததில் இருந்து எடுத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று முடித்திருந்தார்.

இந்த முடிவு தான் உச்சகட்ட காமடி.

இதை, “நுழலும் தன் வாயால் கெடும்” என்ற தமிழ் பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வைத்து கொள்ளலாம்

அந்த பதிவரும் அவரது அடிப்பொடி ஆழ்வார்களும், அமரகோசம் என்பது ஒரு புராண நூல் என்று நினைத்துகொண்டார்கள் போல, அரைகுறையாக விக்கியில் படித்து பதிவு போட்டால் இப்படித்தான்
  1. முதலில் அமரகோசம் என்பது ஒரு நூல் அல்ல, அது ஒரு சமஸ்கிருத அகராதி – அதாவது Thesarus or Dictionary
  2. அந்த அகராதியை எழுதியவர் அமரசிம்கா
  3. இந்த அமரசிம்கா ஒரு மகாயான புத்தமத துறவி,
  4. மகாயான காலத்தில் புத்த நூல்கள் பாலி மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்பட்டது
  5. இந்த நூலில், இன்று இந்து கடவுள்கள் என்று நாம் நினைக்கும், கணேசன் பெயர் உட்பட, பல லட்சுமிகள், குபேரன், என இன்னும் பல புத்த கடவுள்களின் பெயர்களும் அந்தபெயருக்கு உண்டான பொருளும் சொல்லப்பட்டுள்ளது
  6. இந்த நூலின் கடவுள்களை பற்றிய பகுதியின் முதல் பாடல் எது தெரியுமா (பாடல் எண் 1.1.30)

“”சா சாக்கியசிம்ஹா சர்வார்த்த சித்தார்த்தா ஸௌத்தோடநிஷச் சாஹ்
கௌத்தமஸ் சாரக பந்து மாயாதேவியுட் ஆஷா சாஹ்”
     7. அந்த சமஸ்கிருத பாடலின் வரிவடிவத்தை தமிழில் கொடுத்துள்ளேன், தமிழில் அர்த்தம் எல்லாம் சொல்லவேண்டாம் என்று நினைக்கிறன், நண்பர்களுக்கு எளிதில் விளங்கும்
   8. ஆக மொத்தத்தில் பதிவர் அப்பன் கணேசன் குதிருக்குள்ளே இல்லை என்று அவரே ஒப்புக்கொண்டுவிட்டார்.

Saturday, August 26, 2017

நீட் – வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லுதல் – கல்வியை கேலி செய்தல் - இன்றும் சில எலைட்டுகள் தன் விஷ நாக்குகளை வைத்து செய்யும் திரிப்பு வேலைகள்.



இந்த பதிவில் உள்ள படத்தை நன்றாக பாருங்கள், பிறகு மேலே சொன்ன தலைப்புக்கும் பிறகு நான் சொல்லவிருக்கும் கருத்துக்கும் உள்ள தொடர்பு நன்றாக புரியும்.

கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ, எல்லோராலும் பகிரப்படுகிறது. அதன் தலைப்பே ஏன் தமிழர்கள் இந்தி பேச மாட்டார்கள் என்று அதில் பெரிய எழுத்தில் இருக்கும்.

அந்த வீடியோவில் பேசும் நபர் தொடங்கும் போதே, நாங்கள் தமிழர்கள், நாங்கள் இந்தி தெரியாது என்பதால் பேச மறுப்பதில்லை, வடஇந்தியர்களான உங்களை வெறுப்பேற்றுவதற்காகவே நாங்கள் பேச மறுக்கிறோம், என்று தொடங்குவார்.

அதை கேட்ட உடன் நமது தமிழன் எல்லோரும், தமிழன்டா என்று நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி அந்த வீடியோவை பகிர்வது எனது சமுதாய கடமை என்று பகிரத்தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் இது என்ன வீடியோ, அதன் பின்னணி என்ன என்று பகிர்வதற்கு முன் தமிழர்கள் அதன் பின்னணியை அறியவேண்டும்.

அதை பற்றி விளக்குவதற்க்கு முன், அந்த படத்தில் உள்ள இரண்டாவது நபர் யாரென்று தெரிகிறதா என்று பாருங்கள், சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில், ஜீனியஸ் என்ற பெயரில் பள்ளி குழந்தைகளுக்கான ஒரு வினாவிடை நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்.

அந்த படத்தில் உள்ள மூன்றாவது நபர், யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இரண்டாம் கதாயகனாக நடித்தவர். சில மாதங்களுக்கு முன் பாடகி சுசித்திரா வெளியிட்டதாக திரைஉலகின் பிரபலங்களின் அந்தரங்க படங்கள் வெளியானதே அந்த பாடகியின் கணவர் தான் இந்த கார்த்திக் குமார்

இவர்கள் எல்லாம் யார் என்றால், இவர்கள் எல்லாம் முன்னாள் மென்பொறியாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள், உண்மையாகவும் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவருக்கும் வேறு ஒரு போது தொடர்பு உண்டு, இவர்கள் எல்லோரும் மைலாபூர் சேர்ந்தவர்கள் அல்லது சார்ந்தவர்கள் என்பது தான் அது

ஆனால் இவர்களது வேலை தற்போது என்ன என்று பார்த்தால்

இவர்களது கூட்டம் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுபவர்கள் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள்

இவர்கள், ஸ்டான்டப் காமடி என்ற பெயரில் காசு வாங்கி கொண்டு, பப்புகள் மற்றும் தனியார் பார்டிகளில்
மிக அருவருப்பான செக்ஸ் ஜோக்குகள் அடிப்பதை தொழிலாக கொண்ட ஒரு எலைட் கூட்டம்

அப்படி ஒரு எலைட் குருப் இருப்பதே இங்கு நம்மில் பலருக்கு தெரியாது.

மேல சொன்ன விஜய் டிவி வினாவிடை நிகழ்ச்சி தொகுப்பாளராக அந்த நபர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் மிகச்சிறந்த கல்வியாளர் என்பதாலா அல்லது அந்த எலைட் குர்ப்பை சேர்ந்தவர் என்பதாலா அல்லது மிக சிறந்த செக்ஸ் ஜோக்குகள் சொல்லும் திறமை படைத்தவர் என்பதாலா என்று விஜய் டிவிக்கே வெளிச்சம்

இந்த எலைட் கலாச்சாரம் வடஇந்தியாவில் தொடங்கி, இப்போது தமிழ் நாட்டு பப்புகளிலும் பார்டிகளிலும் வந்து விட்டது, இந்த மூவர் மட்டுமே இந்த கலாச்சாரத்தின் முன்னோடிகள் அல்ல,
வடஇந்தியாவில் ரஜ்னிஷ் கப்பூர், அதிதி மிட்டல் போன்றவர்கள் மிக மிக பிரபலம்,
ஒரு அரைமணிநேரம், பெண்ணின் மார்பகத்தை பற்றி எவ்வளவு கொச்சையாக காமெடி என்ற பெயரில் பேசவேண்டுமோ அந்த அளவுக்கு பேசிவிட்டு இறுதியில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக தான் இவ்வளவு நேரம் பேசினோம் என்பார்கள்.

நம் தமிழ் நாட்டு குருப்பில் உள்ள ஒரு நபர் குண்டி என்ற வார்த்தையை பயன் படுத்தி 15 நிமிடம் பேசினார். மற்றொருவர், ஐரோப்பியர்கள் தங்களை காக்கேசியன் என்று சொல்லிக் கொள்கிறார்கள், நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன், உண்மையில் நாங்கள் தான் ஏசியன் எங்களிடமும் தான் ................... இருக்கிறது அதனால் நாங்கள் தான் காக்கேசியன் என்பார்.

இவர்களுக்கு கார்பொரேட் உலகில் எல்லாம் கிடைக்கும், இவர்கள் தான் இந்த எலைடுகள்.

இவர்கள் சிலநேரம் பார்பனரை ஏன் மோடியை கூட கலாய்ப்பார்கள், அதற்காக இவர்கள் போராளிகள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட அடிவிழும் கணத்துக்கு முன்னால் வரை நீங்கள் இவர்களை அங்கே பார்க்கலாம்.

எப்போதாவது சரக்கடிக்கும் போது யூ-டியுபில் இவர்களது காமநெடிகளை கண்டு ரசியுங்கள். இவர்களது வேலையை ஆங்கிலத்தில் Soft Porn Standup show என்று சொல்லலாம்

அதற்கு மேல் எந்த வோர்த்தும் இல்லை, ஆனால் இந்த ஸ்டான்டப் ஷோக்களில் இவர்களது பேச்சுகள் முழுக்க முழுக்க செக்ஸ் பூசப்பட்டிருந்தாலும், இந்த பதிவின் தலைப்பில் சொன்ன விஷயங்களே அடிநாதமாக இருக்கும்

சம்பந்தம் இல்லாமல் மார்பியஸ், நீயோ பெரியார் படம் இந்த பதிவில் ஏன் என்று

புரியாமல் கேட்பவர்கள், ராஜ் டிவியில் மதியம் கைகொடுப்பாள் கற்பகாம்பாள் படம் போடுவார்கள் அதை பார்த்து அமைதியாக உறங்கவும்

புரிந்தவர்கள் உங்களை நீங்களே முதிகில் தட்டிகொடுத்துகொள்ளவும்

Thursday, August 24, 2017

தேவ மைந்தனின் பிறந்தநாள்



இந்த சம்பவம் நடந்தது கிமு44-ல், ஏசு உண்மையில் பிறந்தது இன்று எல்லோரும் சொல்லும் சைபர் வருடத்தில் அல்ல. அதற்கு 44 வருடங்களுக்கு முன்னரே அவர் பிறந்து விட்டார்.

இதை கிரிகோரியன் காலேண்டர் என்று நீங்கள் கூகிளில் தேடி பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.     

அந்த கிமு44-ல் நடந்த சம்பவம் பற்றியதே இந்த பதிவு.

அப்போது யஹோவா என்ற ஆதி கர்த்தர்,

மேரியை கடத்திக் கொண்டு வந்து ஓர் பனி படர்ந்த மலையில் ஒளித்து வைத்திருந்தார், ஏசு என்ற தேவ மைந்தனை, அவளுக்கு கொடுப்பதற்காக

அதாவது  பதின்ம வயதில் உள்ள பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தையை  உருவாக்கும் நல்ல எண்ணத்துடன்.

ஒரு வேளை இந்த ஆதி கர்த்தர் பதின்மவயதில் இருந்த மேரியை கற்பம் ஆக்காமல் அவளை திருமணம் செய்து கொள்ள ஒத்து கொண்ட யோசப்பை  கர்ப்பம் ஆக்கி காட்டியிருந்தால், அவனது வயிற்றில் இருந்து ஒரு தேவ மைந்தனை பிறக்க வைத்து கட்டியிருந்தால்  நானும் கர்த்தர் நல்லவர் மகிமை செய்யப் படவேண்டியவர் என்று ஒத்து கொண்டிருப்பேன்

ஒரு டீன் ஏஜ் பெண்ணை கடவுளின் பெயரால் கர்ப்பம் ஆக்குவது உலகம் முழுவதும் எந்த காலத்திலும், என் இன்றும் செய்வது சுலபமான வேலை. அதற்கு மகிமையான கர்த்தர் தேவையில்லை, தெருவோர கோயிலின் பூசாரியே போதும்.

ஆனால் எங்கள் ஊர் மகாவிஷ்ணு அதையும் நாரதர் மூலம் ஒருமுறை அல்ல 60 முறை செய்து காட்டி விஞ்ஞான கடவுள் என்று ஏற்கனவே பெயர் வாங்கி விட்டார், அந்த குழந்தைகள் தான் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் 

ஆதி கர்த்தரை விட மகாவிஷ்ணு knows more science

MY ANCHESTORS ARE NOT IDIOTS

ஆயினும் கர்த்தர் இப்படியாக மேரியை கடத்தி கொண்டு வந்து ஒரு பனிமலையில் ஒளித்து வைத்து விட்டு வேறு வேலையாக எங்கோ சென்று விட்டார்.

திரும்பி வந்த ஆதி கர்த்தரான யஹோவா பார்த்தால், மேரிமாதா அந்த பனி பிரதேசத்தின் குளிரில் இருந்து தன்னை காத்து கொள்ள தன் விரல்களில் மருதாணி வைத்திருந்தார்

மருதாணி நன்றாக கைகளில் ஒட்டிக்கொண்ட உடன், அந்த காய்ந்த மருதாணியை உடைத்து  போட்டார்.

அந்த மருதாணி துகள்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒரு குழந்தையாக மாரிவிட்டது.

வேட்டைக்கு சென்ற திரும்பி வந்த சிவபெருமானான சுடளிமாட சாமியான யஹோவா கோபமாக நான் இல்லாமல் எப்படி ஒரு குழந்தை பிறந்தது என்று கேட்டு அந்த குழந்தையின் தலையை வெட்டி விடுகிறார்  

மேரி மாதா, உடனே எப்படி குழந்தை பிறந்தது என்று நீங்கள் உங்கள் நண்பரான  நந்தியிடம் தான் கேட்க வேண்டும்

ஆனால் ஏன் நீங்கள் சோம பானம் குடித்து விட்டு வந்து என் குழந்தையை ஏன் கொன்று போட்டீர்கள் என்று கேட்க

யஹோவா, கவலை வேண்டாம் மேரி, உன் மகன் என் மகன்

இதில் நடுவில் நந்தியை எல்லாம் சாட்சிக்கு அழைக்க வேண்டாம்

இன்று இறந்த நம் மகன் மூன்றாம் நாள் உயிர்த் தெளுவான் என்று சொல்லி, மேரியை சமாதானம் செய்து விட்டு

தன் பூதகணங்களுக்கு எல்லாம் ஒரு கட்டளை போட்டார், ஏதாவது ஒரு லூசு வடக்கு பக்கம் NEET EXAM நடக்குதுன்னு தூங்கி கொண்டு இருப்பான், அவன் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்திருப்பான் அவன் தலையை வெட்டி கொண்டு வா என்று சொல்லி அனுப்பினார்.

ஆனால் தமிழ் நாட்டில் எல்லா லூசுகளும் வடக்கு பக்கம் தளி வைத்து தூங்கி கொண்டிருந்ததை பார்த்த பூத கணங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர், பாவம் அந்த பூதங்கள் எல்லாம் சமச்சீர் கல்வி கற்றவர்கள்.      

அப்போது யஹோவா கவலை வேண்டாம் அங்கே ஒரு யானை படுத்திருகிறது பாருங்கள் என்று சொல்லி, அதன் தலையை வெட்டுங்கள் என்று சொல்ல அந்த பூத கணங்கள் யானையின் தலையை கொண்டு வந்து கொடுக்க,
செத்து போன பிள்ளையின் உடலில் ஓட்டவைக்கிறார் யஹோவா 

இப்படியாக யார் பிள்ளை என்று தெரியாத காரணத்தால் அவர் பிள்ளையார் என்றும்

யஹோவாவின் பூத கணங்கள் அவர் மறு பிறவி எடுக்க காரணமாக இருந்ததால் கணபதி என்றும்              

நமது பாவங்களுக்கு மன்னிப்பு தரும் வினைகள் தீர்ப்பவர் என்பதால் வினை தீர்க்கும் நாயகன் என்றும்

இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் நமது பிள்ளையார், கிபி 500-ல் வாதாபியில் தன்னை வழிபட்ட சாளுக்கியன் கெட்டவன் என்பதால்


படையெடுத்து வந்த நல்லவன் நரசிம்மனோடு தமிழகம் வந்தவர் வீர விநாயகன்

சங்க காலத்தில் ஒரு இளம் பெண்ணாக இருந்த, பெண் புலவரான அவ்வையாரை கிழவியாக மாற்றி Work Place Sexual Harrasment-ல் இருந்து காப்பாற்றிய Feminist – ஆன கணேசனை

பெயர் மாற்றி இயேசு மூன்றாம் நாள் உயிருடன் வந்தார் போய் கதை பரப்பும் வெள்ளையர் புரட்டை நம்பாமல்

வீர விநாயகனை வணங்குவோம்

இந்த தேவ மைந்தனின் பிறந்த தினமான இன்று எல்லோருக்கும் ஹாப்பி பிள்ளையார் டே என்று சொல்லிக் கொள்கிறேன்

இன்னும் நம்பிக்கை இல்லையென்றால் இந்த பதிவில் உள்ள படத்தை பாருங்கள் ஏசு பிறந்தததாக சொல்லப்படும்  கிமு 44 December 25,  வளர்பிறை சதுர்த்தி நாள் தான் பிள்ளையார் பிறந்த தினம்  

இப்போதாவது என் முன்னோர்கள் யாருமே மூடரில்லை என்று புரிந்து கொண்டு தேவ மைந்தனான பிள்ளையாரின் பிறந்தநாளை மகிழ்வோடு எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்         

         

தமிழன் எப்போது துருக்கி சென்றான்

துருக்கி நாட்டில் யுபிரிடஸ் நதிக்கு மேற்கே உள்ள ஒரு பெரிய நகரத்தின் பெயர்

அதியமான்

துருக்கிய மொழியில் அதற்கு அர்த்தம் மிக கடினமான என்பதாகும் - இன்றும் அந்த ஊருக்கு அதியமான் என்றே பெயர்

அதியமானின் தலைநகரம் தகடூர் - இரும்பை மெல்லிய தகடாக அ்டித்து தட்டும் ஊர் என்று பொருள்

அந்த நகருக்கு அருகே உள்ள ஒரு பெரிய குகை தொடருக்கு பெயர்

பழன்லி (அ) பழனி,

இந்த குகையில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கிறதாம்.

பல கற்கால ஓவியங்கள் இந்த குகையில் பார்க்கலாம், இந்த குகையின் இன்னொரு பெயர் கப்படோசயா

இந்த கப்படோசயா-வின் பழைய பாரசீக பெயர் ஹஸ்படுயா, அதன் மூலச்சொல் கட்ட படுக்கை

இந்த கட்ட படுக்கை என்ற சொல்லின் பாரசீக அர்த்தம் தாழ்வான நிலம் அல்லது பகுதி என்பதாகும்

அப்படிஎன்றால் தமிழன் எப்போது துருக்கி சென்றான்

Wednesday, August 23, 2017

கிருஷ்ணனும் கால் யவனனும்

மகாபாரத்ததில், கிருஷ்ணர் கம்சனை கொன்றபிறகு, கம்சனின் மாமனார் ஜராசந்தன், கிருஷ்ணனை கொல்ல சபதம் எடுக்கிறார், மகதநாட்டு மன்னனான தன்னால் தனியாக கிருஷ்ணனுடன் போரிட முடியாது என்று, கால் யவனன் என்ற மேற்கு திசை மன்னனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இருவரும் ஒரே நேரத்தில் மதுரா நகரை தாக்குகிறார்கள்.

இவர்களின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத கிருஷ்ணன் தன் மக்களை கடலில் உள்ள தீவு நகரமான துவாரகைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்து விட்டு தப்பி ஓடுகிறான்,

இப்படி போரிலிருந்து ஓடியவன் என்ற பொருள் படும்படி, கிருஷ்ணன் “ரன்சோதிராய்” என்னும் சிறப்பு பெயரால் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறான்.

அப்படி ஓடிய கிருஷ்ணன், ஒரு குகைக்குள் நுழைந்து, அங்கே நீண்ட நாளாக உறங்கிகொண்டிருக்கும், முசுகுந்த சோழன் உடலில் தன் மேல் துணியை போர்த்திவிட்டு, அந்த சோழனின் பின்னே ஒளிந்துகொள்கிறான்.

முசுகுந்த சோழனுக்கு ஒரு வரம் உண்டு, அவன் உறங்கும் போது யாராவது அவனது உறக்கத்தை கலைத்தால், அவனது கோவப்பார்வை பட்டால் எழுப்பியவர் எரிந்து சாம்பாலாகிவிடுவார்கள்.

இது தெரியாமல் பின்தொடர்ந்த கால் யவனன், படுத்திருப்பது கிருஷ்ணன் என்று எண்ணி எட்டி உதைக்க, சோழன் எழுந்து முறைக்க, எரிந்து சாம்பலாகிறான் கால் யவனன்.

பின் கிருஷ்ணன் துவாரகைக்கும், சோழன் தன் நாட்டிற்கும் செல்கின்றனர்.

இப்போது கேள்வி என்னவென்றால்,
இந்தியாவில் அல்லது தற்போதைய இந்தியாவின் மேற்கு பகுதியில் எந்த யவன மன்னன் இருந்தான் என்பதே.

வடஇந்திய ஆரியருக்கு கிமு300-இல் அலேக்சாண்டர்க்கு முன் யவனர்கள் பற்றி எதுவும் தெரியாது, எந்த வேதநூல்களிலும் யவனர் பற்றிய எந்த குறிப்பும் கிடையாது,

அலேக்சண்டரின் கவர்னர் ஆனா செலுக்கஸ் நிகேடாரின் வம்சமாக வந்து இந்தியாவின் மேற்கு பகுதியை, தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் பாக்டீரியா நகரை தலைநகரமாக கொண்டு ஆண்டவர்கள் குஷானர்கள்,

அவர்கள் எப்போதும் தங்களை யவனர்களாகவே அடையாளம் காட்டி கொண்டனர் அவர்களது பொற்காசுகளில், கிரேக்க மொழியையே பயன்படுத்தினர்.

கால் யவனன், ஒரு யவனமன்னன் என்று மகாபாரத்ததில் தெளிவாக சொல்லப்படுகிறது,

அப்படியானால், கீழ் கண்டவற்றில் எது சரி என்று வதம் செய்ய வாருங்கள்:
  1. மகாபாரதம் நடந்த காலம் குஷனர்கள் காலம் – அதாவது கிமு300 - கிபி 230 வரை
  2. மகாபாரதம் 5000 – 10,000 வருடத்துக்கு முன் நடந்தது என சொல்லப்படுவது உடான்சு
  3. அதெல்லாம் இல்லை, இந்த ஒரு பகுதி மட்டுமே பின்னாளில் சேர்க்கப் பட்டிருக்கலாம் என்ற வாதம் வைக்க நீங்கள் முன்வந்தால், அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
  4. அப்படியானால் மகாபாரதம் முழுக்க முழுக்க இது போல பல பகுதிகள் சேர்க்கப்பட்ட உடன்சு கதைகளின் புரட்டு புராணம் என்பதை ஒப்புகொள்கிறீர்களா
  5. மகாபாரதம் 5000 வருடம் முன்னரே நடந்தது, எழுதிய வியாசர் தான் பிற்காலத்தை சேர்ந்தவர், என்பது உங்கள் வாதம் என்றால்  
  6. அப்படியானால் வியாசர் வேத காலத்தை சேர்ந்தவர் இல்லை, குஷானர் காலத்துக்கு பின்னர் வந்தவர் என்பது உண்மை என்று நீங்கள் ஒப்பு கொள்ள வேண்டும் 
  7. வியாசர் மகாபராதத்தை சொல்ல சொல்ல விநாயகர் எழுதினர்,  
  8. விநாயகர், முதல் முதலில் இந்திய வரலாற்றில் வருவதே, நரசிம்ம பல்லவன் கிபி 650-ல் வாதாபி நகரத்தின் மீது படை எடுக்கு போது தான். அப்போது தான் அப்படி ஒரு கடவுள் இருப்பதே, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு தெரியவருகிறது.  
  9. எனவே வியாசர் கிபி 600-ஐ சேர்ந்தவர்,  
  10. மகாபாரதம் எழுதப்பட்டதும் கிபி600-களில் தான்
இனி அறிவுக்கும், விஞ்ஞானப் பார்வைகும் ஒவ்வாத,

அவர்களுக்கு மட்டுமே தெரிந்த வாட்சப் புள்ளி விவரங்களை அள்ளிதெளித்து கோலம் போட்டு விளையாட வேத வரலாற்று வல்லுனர்களை அன்புடன் அழைக்கிறோம்.

Saturday, August 19, 2017

ஸ்ரீவைஷ்ணவம் – ராமனுஜர்


ஸ்ரீவைஷ்ணவம் என்பது ராமனுஜர் தோற்றுவித்த மதத்தின் பெயர், இந்த மதத்தை சேர்ந்தவர்களை தான் நாம் இன்று தென்கலை வைணவர்கள் என்கிறோம். இந்த தென்கலை மற்றும் வடகலை வைணவர்கள் என்பதை சுலபமாக அடையாளம் புரிந்துகொள்ள அவர்களின் நாமம் இடும் முறையில் அறிந்து கொள்ளலாம். U வடிவம் வடகலை Y வடிவம் தென்கலை.

இதில் வடகலை வைணவம் முழுக்க முழுக்க வைதீகம், பார்ப்பனீயம், மனு சாஸ்திரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. Conservative Group. ஆனால் ராமானுஜர் தோற்றுவித்த தென்கலை வைணவம் என்பது அப்படி அல்ல எல்லா மக்களையும் உள்ளடக்கி கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது Liberal Group.

இப்படி ஒருவித Liberal Sect-ஆக இருந்ததாலேயே அதை தென்கலை என்றனர், தெற்கு என்றால் கீழே, கீழானது என்றும் ஒரு மறைமுக அர்த்தம் அதில் உண்டு. அதுவும் பார்பனர் விளையாட்டே.

இன்றும் வடைகலை வைணவர்கள், தென்கலை வைணவர்களிடம் பெண்கொடுப்பதோ பெண்எடுப்பதோ வைத்து கொள்ள மாட்டார்கள் ஏன் என்று இந்த பதிவின் இறுதியில் எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்

ராமானுஜர் உருவாகிய மதத்தின் பெயர் ஸ்ரீவைஷ்ணவம் அவரது தத்துவங்களை விஷிஷ்டாத் வைதம் என்று அவர் அழைத்தார்.

விஷிஷ்டாத் வைதம் என்ற வார்த்தைக்கு தரமான, சிறப்பு தன்மை கொண்ட அத்வைதம் என்று பொருள், அத்வைதம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. அதை தரமானதாக மாற்றிவிட்டதாக ராமனுஜர் அறிவிக்கிறார். இந்த விஷிஷ்டாத்வைதம், பிரஸ்தான திரியை (சிறப்பான மூன்று நூல்கள் என்று பொருள்) எனப்படும் உபநிஷத்துகள், பகவத்கிதை மற்றும் பிரம்மா சூத்திரம் ஆகிய மூன்று நூல்களை எப்படி சரியான முறையில் பொருள் கொள்ளவேண்டும் என்பதன் விளக்கமாகும்.

அதாவது தப்புதப்பாக அவற்றில் உண்மையில் சொல்லியிருந்தாலும் நாம் எப்படி சரியான பொருளை புரிந்துகொள்ளவேண்டும் என்ற விளக்கங்கள் கொண்ட வேதாந்தமே விஷிஷ்டாத்வைதம்.

இந்தியாவில் வேதகாலங்கள் ஒருமுடிவுக்கு வந்தது கிமு.600 – 500களில், வடஇந்தியாவில், புத்தரில், தொடங்கி, மகாவீரர், அஜிவகர், சார்வாகர், அஜிதா கேசகம்ப்ளின், அஞ்சனர் போன்ற பலர், கிமு.600 – 500 களிலேயே வேத மறுப்பு கருத்துகளை முன்வைக்க தொடங்கினர், பார்பனரும் வேதகொஷங்களும், அவற்றில் உள்ள புரட்டுகளையும் விளக்கி, அவையெதுவுமே இல்லாமல் வாழும் முறை கடவுளை ஒரு பூசாரி இல்லாமல் வணங்கும் முறை போன்றவற்றை மக்களுக்கு போதித்தனர்.

அதிலும் அந்த காலத்திலேயே அஜிவகர், சர்வாகர், அஜிதா கேசகம்ப்ளின், அஞ்சனர் போன்றவர்கள் கடவுளே தேவையில்லை என்று நேரடியாக நாத்திக பொருள்முதல் வாதங்களை மக்களிடையே பரப்பினர்.

அப்போது பார்பனருக்கு தங்கள் வேதமதத்தை மீட்டுருவாக்கம் செய்ய பழைய வேத மந்திரங்கள் போதவில்லை. ஆகையால், அவர்களும் கருத்தியல்களை(Cncepts & Theories) உருவாக்க தொடங்கினர், அந்த காலத்தில் அரசரின் உதவி இல்லாமல் ஒரு மதத்தை பரப்ப இயலாது, அதற்கான சூழ்நிலை, அவர்களுக்கு முதலில் கிமு185-ல் மற்றும் பிறகு குப்தர்களின் காலமான கிபி 240-லும் கிடைத்தது. அந்த காலக்கட்டத்தில் அவர்கள் உருவாகிய கருத்தியல்களை நாம் ஆறாக பிரிக்கலாம்.

அப்போது வேத மறுப்பு சித்தாந்தங்களாக இருந்தவை
  1. பௌத்தம்
  2. சமணம்
  3. யோகம் 
  4. அஞ்சனம்
  5. அஜிவகம்
  6. சர்வாகம்

இவற்றை மறுத்து மீண்டும் வேதகால மதத்தை மீட்டுருவாக்கம் செய்ய உருவாக்கப்பட்ட தத்துவங்கள், பின்வருவன
  1. நியமம்
  2. வைசேசிகம்
  3. சம்கியம்
  4. யோகம் (வேத மறுப்பு சித்தாந்ததிலிருந்து நேரடியாக திருடப்பட்டது)
  5. மீமாம்சம்
  6. வேதாந்தம்

இவற்றை பற்றி விளக்கமாக வேறு ஒரு பதிவில் காண்போம். இதில் ஆறாவதாக சொல்லப்படும் வேதாந்தம் என்பதே இந்து மதத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் அதாவது சைவம், வைணவம், போன்றவற்றில் எப்படி கடவுளை வணங்குவது, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை பற்றி விளக்கும் பகுதி.

இங்கே நாம் ஒன்றை கவனித்தால், சைவம், வைணவம், சாக்தம்(சக்தி வழிபாடு), கெளமாரம்(முருகன் வழிபாடு) இப்படி பலவித மத வழிபாடு இந்தியாவில் இருந்தாலும், எல்லா முறைகளையும் சேர்த்து இந்து மதம் என்று சொல்வதன் காரணமே, இந்த ஆறாவது பகுதியை விட்டுவிட்டு மற்ற ஐந்தையும் பொதுவாக மாற்றி காட்டிய பார்பன தந்திரமே. கொஞ்சம் விட்டால் இயேசு, அல்லா எல்லோரையும் இந்த ஆறாவது பகுதியான வேதாந்தத்தில் சேர்த்துவிட்டு அவர்களையும் இந்து கடவுள் என்று சொல்வார்கள்

இந்த பார்பனர். நல்லவேளை அதற்குள் மக்கள் பலபகுதிகளுக்கு பயணித்து உலகின் மற்ற பகுதிகளுக்கு நேரடி தொடர்பு ஏற்பட்டதால் பார்பனரால் அல்லா ஏசுவை எல்லாம் உள்வாங்க முடியவில்லை,

ஆயினும் அவர்கள் அந்த முயற்சியை செய்யாமல் இல்லை. பவிஷ்ய புராணம் என்று ஒரு நூல் உள்ளது, இது எப்போது எழதப்பட்டது என்று சரிவர தெரியவில்லை,

இதை கிபி200-ல் எழுதியது என்று சொல்வார்கள், அக்பர் தீன்-இ-லாஹி மதம் கண்டுபிடித்தபோது எழுதப்பட்டது என்றும் சொல்வார்கள், வேறு சிலர் ஆங்கிலேயே பாதிரியார்கள் காலத்தில் எழுதப்பட்டது என்றும் சொல்வார்கள்

இந்த நூலில், பிரதி சரக பர்வம் பாகம், பகுதி-4 , 28-ஆம் பாடல் என்ன சொல்கிறது என்றால்.

"இந்திரியாணி தமிதவா
ஏஹாயாத் மத்தியான பாராயண :
தஸ்மாத் ஆதாமா நாமாஸ்ய
பத்னீ ஹவ்யவாதி ஸ்ம்ரிதி " பாடல் இன்னும் நீளமாக போகும்

அந்த பகுதியின் மொத்த பொருள் என்ன வென்றால்

பரதான் நகரின் கிழக்கு பகுதியில் கடவுளால், உருவாக்கப்பட்ட ஒரு பெரிய தோட்டம் இருந்தது, அங்கே இருந்த ஒரு பாபவிருக்ஷத்தின், கீழே ஆதாமா என்ற பெயருடைய புருஷன், தன் மனைவி அவ்வாவதியுடன் வாழ்ந்துவந்தான். ஒரு நாள் கலிபுருஷன், பாம்பு வடிவில் வந்து, ஆதமாவை அந்த பாபவிருக்ஷத்தின் கனியை உண்ணும் படி தூண்டினான், அவர்கள் இருவரும் அதுவராய் வெறும் காற்றையும் உதும்பரா என்ற இலைகளையும் பட்டுமே உண்டு வாழ்ந்தனர். களிபுருஷனின் தூண்டுதலில் அந்த கனியை உண்டதால் அவர்கள் விஷ்ணுவின் கோபத்துக்கு ஆளானார்கள், அந்த தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள்.

இதுவாவது பரவாயில்லை,

பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 3, பாடல் 5-8 – இன்னும் மிக சிறப்பு
///////////////////////////////////////////////////////////////////////
ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச
ஆச்சார்யண ஸமின் வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே
மருஸ் தல நிவாஸினம்
////////////////////////////////////////////////////////////////////////////
இதன் பொருள் ஒரு அன்னிய நாட்டில் ஓர் ஆன்மீக சீர்த்திருத்தவாதி, தமது சிஷ்யர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார்.

அடுத்து பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 25, பாடல் 3
////////////////////////////////////////////////////////////////////////////
லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம
முஸலை நைஸ் மஸ்கார
////////////////////////////////////////////////////////////////////////////

அவர்கள் லிங்கச்சேதம் (சுன்னத்) செய்வார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தமிட்டு அழைப்பார்கள் (பாங்கு). முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்

இது போல இன்னும் நிறைய உண்டு, பிறகு நாம் ராமானுஜரை விட்டுவிட்டு புரட்டு வேதங்களின் பின்னே போய்விடுவோம்

இன்னும் நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் கந்தகுரு கவசம் என்ற நூலில் வரும் வரிகள் உங்களுக்கு விளக்கும். அது

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்

இந்த பாடலில் வேதாந்த ரகசியம் என்பதே இந்த பார்பனர் சூழ்ச்சியை புரிந்து கொள் என்பதே.

சரி இந்த வேதாந்தம் என்றால் என்ன?


வேத அந்தம் என்றால் வேதத்தின் முடிவு, அதாவது இனி வேதம் வேலைக்கு ஆகாது வேறு வழியை பார்க்க வேண்டும் என்று பார்பனன் முடிவு செய்து எழுதத் தொடங்கிய நூல்கள் என்று அர்த்தம்.


பார்பனரிடம் கேட்டால் இல்லை அது வேதத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முடிவான பொருள் என்பார்.


விஜயம் என்றால் வெற்றி என்பான், அஜயம் என்றால் தோல்வி என்பான்


அதே ஒரு நபருக்கு பெயர் வைக்குக் போது  விஜய் என்றால் வெற்றி பெற்றவன் என்பான் அஜய் என்றால் எதிரிகளுக்கு தோல்வியை தருபவன் என்பான், நாம் கேள்வி கேட்டல் நம்மை சூத்திரன் பஞ்சமன் என்பான் 
        

இதுவெல்லாம் சரி, ராமானுஜர் பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு எதோ சொல்கிறாயே என்று கேட்கிறீர்களா, வெறும் வாழ்கை வரலாறு என்றால் நாலு வரியில் எழுதலாம் ஆனால்  இந்த பின்புலம் தெரிந்தால் தான் ராமானுஜர் செய்த சில சிறப்பான விஷயங்களை பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.    



இனி வேதம் வேலைக்கு ஆகாது வேறு வழியை பார்க்க வேண்டும் என்று பார்பனன் முடிவு செய்து எழுதிய நூல்களை வேதாந்தம் என்று சொன்னார்கள், அந்த வேதாந்தங்கள் அதாவது கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை சொல்லும் வேதாந்தங்களை மறுபடியும் கீழே உள்ளது போல பிரிக்கிறார்கள்

1.       பிரம்ம சூத்திரங்கள்
2.       அத்வைதம்
3.       விஷிஷ்டாத்வைதம்
4.       துவைதம்
5.       சுத்தாத்வைதம்
6.       பெஹடபேதம்

இதில் பிரம்ம சூத்திரங்கள் என்றால் என்ன என்று கேட்டால் ஆதிசங்கரர் அதை தான் மட்டுமே படித்தேன் என்று சொல்லுவார், அதை பற்றி அடுத்த  ஆதிசங்கரர்  பற்றிய தனி பதிவில் காண்போம். இரண்டாவது ஆதிசங்கரரின் தத்துவம் மூன்றாவது ராமானுஜரின் தத்துவம். இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் என் இவ்வளவு பெரிய முன்னோட்டம் கொடுத்தேன் என்று    


வேதகால வைதீக மதங்கள், பெரிய அளவில் மறுஉயிர் பெற்றது, ஆதிசங்கரர் காலத்தில் தான், அதாவது பௌத்த சமண மதங்களின் வருகையால் பார்பனர் சமூகத்தில் தாங்கள் இழந்த முக்கியத்துவத்தை மீண்டும் மீட்டு கொடுத்தது ஆதிசங்கரன் அதனால் தான் இன்றும் பார்பனர் அவரை ஜெகத்குரு என்று போற்றுவதற்கு காரணம்.

ராமனுஜரின் காலம் கிபி 1017-1137 அதாவது சுமார் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று சொல்லுவார்கள். இவர் நமது ஸ்ரீபெரும்பதுரில் ஒரு பார்பன குடும்பத்தில் பிறந்தார், தந்தை கேசவ சாமயாஜி, தாய் காந்திமதி. தன 16ஆவது வயதில் ரக்ஷாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அதே காலகட்டத்தில் தந்தையின் மறைவுக்கு பின், உயர்கல்வி கற்க காஞ்சி மாநகருக்கு செல்கிறார்.

அங்கே அவர் யாதவ பிரகாசர் நடத்திய அத்வைத குருகுலத்தில் சேர்கிறார். அங்கே அவர் பயலும் காலத்தில், அவருக்கும் ஆசிரியர் யாதவ பிரகாசருக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படும், பெரும்பாலான வாதங்களில் ராமானுஜரே வெல்வார், இது அடிக்கடி நடக்க, எரிச்சல் அடைந்த ஆசிரியர் யாதவ பிரகாசர், ராமானுஜரை வேறு சில சீடர்களோடு காசி யாத்திரை சென்று வரும்படி சொன்னார், அனால் வேர் நபர்களிடம் சொல்லி செல்லும் வழியிலேயே ராமானுஜரை கொன்றுவிடும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் அதே குருகுலத்தில் படித்த கோவிந்த பட்டன் என்ற அவரது மற்றொரு மாணவர் இந்த கொலைச்சதியை ராமானுஜருக்கு சொல்ல, அவர் தப்பி வேங்கடம் பகுதியில் உள்ள காட்டுக்குள் ஓடிவிடுகிறார், இங்குதான் அவர் முதலில் அங்கிருந்த ஆளரவமற்று இருந்த அவலோகிதீஸ்வரர் கோயிலை முதலில் கண்டுகொள்வது. அங்கே சில வேடுவர்களின் உதவியுடன் மீண்டும் காஞ்சி வருகிறார்.

தன் கொலை முயற்சி வெளியே தெரியாமல் இருக்க ஆசிரியர் யாதவ பிரகாசர், அவரை மீண்டும் குருகுலத்தில் சேர்த்து கொள்கிறார். ஆனால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் கருத்துமோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவர் குருகுலத்தை விட்டு வெளியேறி, காஞ்சியில் உள்ள கருடராஜா கோயிலில் பூசாரியாக வேலைக்கு சேர்கிறார்.

இது வரை சைவ குருகுலத்தில் பயின்ற, ஆசிரியர் மீது கொண்ட வெறுப்பால்  வைணவ கோயிலில் பூசை செய்ய சென்றுவிடுகிறார், அங்கே பூசை நேரம் தவிர பிற நேரங்களில் சில மாணவர்களுக்கு, பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.

இவரது போதனைகள் எல்லாமே, வேதாந்தம் தத்துவம் இவைகளை தாண்டி, கடவுள் பக்தியே சிறந்தது, என்பதே, குறிப்பாக பிற மனிதர்களை நேசிக்கவேண்டும், அன்பு காட்டவேண்டும் என்பதே இவரது போதனைகள், இது சக பார்பனருக்கு எரிச்சலை கொடுத்தது.

இந்த காலகட்டத்தில் இவர் புதிதாக வைணவ மதத்துக்கு வந்தவர் என்பதால், இவருக்கு வைணவ நியமம் படி மந்திர தீக்ஷை (மந்திரம் உபதேசம் செய்து புனிதம் ஆக்குவது) செய்யப்படவேண்டும். இந்த உபதேசத்தை கொஷ்டிபுரம் (இன்றைய சிவகங்கை மாவட்டம், 

திருப்பத்தூருக்கு அருகே உள்ள  திருகோஷ்டியூர்) என்ற ஊரில் உள்ள கொஷ்டிபூரனர் (பின்னாளில் இவரே திருகோஷ்டியூர் நம்பி என்று அழைக்கப்படுகிறார்.) என்பவரிடம் சென்று சிக்ஷை பெரும் படி மகாபூரனர் என்பவரால் அறிவுறுத்தப்படுகிறார்.

ராமனுஜரும் பலமுறை கொஷ்டிபூரனரிடம் சென்று தனக்கு மந்திர உபதேசம் செய்ய வேண்டுகிறார், ஆனால் ராமனுஜரின் பார்பன வேத விரோத மனப்பான்மை பிடிக்காத காரணத்தால், சிக்ஷை அளிக்க மறுத்துவிடுகிறார், இறுதியாக 18ஆவது முறை, ராமனுஜர் அவரை அணுகும் போது  சொல்லிக்கொடுக்க ஒப்புகொண்டு, ராமானுஜருக்கு ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார்,

இந்த மந்திரத்தை கேட்டதால், வைகுண்டத்தில் உனக்கு நிச்சயம் இடம் உண்டு ஆனால் இந்த எட்டு எழுத்து மந்திரத்தை நல்ல  பார்பனர் தவிர தகுதி அற்ற வேறு யாருக்காவது சொன்னால் தீராத நரகதண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் செய்து அனுப்புகிறார்.

மறுநாள் அதிகாலையில், முதல் வேலையாக, கொஷ்டிபுரம் பெருமாள் கோயில் மதில் சுவற்றின் மீது ஏறி நின்றுகொண்ட ராமனுஜர், அங்கே சென்ற எல்லா மக்களையும் கூவி அழைத்து, எல்லோரும் இங்கே வாருங்கள் நான் இப்போது உங்கள் எல்லோருக்கும் எட்டு எழுத்து மந்திரம் ஒன்றை உபதேசம் செய்கிறேன், இதை காதால் கேட்டாலே உங்கள் எல்லோருக்கும் வைகுண்டத்தில் இடம் உண்டு, என்று சொல்லி அங்கே குழுமியிருந்த எல்லோருக்கும் அந்த மந்திரத்தை உபதேசம் செய்கிறார்.

மற்ற பார்பனர் தங்களை கோயிலுக்கு உள்ளேயே விட மறுக்கும் போது, இவர் நம்மை அழைத்து மந்திர உபதேசமே செய்கிறாரே என்று மகிழ்ந்த மக்கள் எல்லோரும் அவர் பின் அணிசேர்ந்து அவரையே தங்கள் குருவாக ஏற்கின்றனர்.

அப்போது அங்கே வந்த கோஷ்டிபூரனர், நான் அவ்வளவு சொல்லியும் இப்படி செய்து பாவத்தை தேடிக்கொண்டாயே, நீ நரகத்தில் இருந்து மீளவே முடியாது என்று சொன்னார். அதற்கு ராமானுஜர், எட்டு எழுத்து மந்திரம் கேட்டதால் இத்தனை மக்கள் புனிதம் அடைந்து வைகுண்டம் செல்வார்கள் என்றால், நான் ஒருவன் நிரந்தரமாக நரகத்தில் வாழ தயாராகவே இருக்கிறேன் என்றார்.


தான் செய்வது பார்பனிய எதிர்ப்பு என்று அறிந்தே செய்தவர் ராமானுஜர், அதனாலேயே, அவரை நாம் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் என்று சொல்லலாம்.


இந்த நிகழ்வுக்கு பிறகு அவரின் புகழ் மக்களிடையே பரவத்தொடங்கியது, அது பெரும் பாலும் சைவமதம் சார்ந்த அத்வைத கொள்கை கொண்ட  சக பார்பனருக்கு பிடிக்கவில்லை, எனவே அவர்கள் ஒன்று  திரண்டு, அன்றைய சோழமன்னனான முதலாம் குலோத்துங்கனிடம், சென்று ராமானுஜர் சக்கரவர்த்தி பல தலைமுறைகளாக பின்பற்றிவரும் சைவமதத்துக்கு, விரோதமாக ராமானுஜர் செயல்படுகிறார், மக்களை நிம்மதியாக சைவமதத்தை பின்பற்ற விடாமல் இடையூறு செய்கிறார் என்று பழிசுமத்தினர்.


முதலாம் குலோத்துங்கனும், ராமானுஜரை கைது செய்ய உத்தரவிடுகிறான், அவரை பின்பற்றிய எல்லோரையும் மறுபடியும் சைவமதம் திரும்ப சொல்லி சட்டமியற்றுகிறான், உச்சகட்டமாக, சிதம்பரத்தில்  இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலையை தூக்கி கடலில் போடுகிறான், ஸ்ரீரங்கம் கோயிலை  நிரந்தரமாக மூடும்படி உத்தரவிடுகிறான்.


ராமனுஜர் தன சில சீடர்களுடன் தலைமறைவாகிறார். இந்த சம்பங்களையே நாம் கமலகாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் கண்ட ஆரம்ப காட்சிகள். இதில் கமலகாசன் சொல்லாமல் விட்ட சேதி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய சேதி என்னவென்றால்.


ராமனுஜர் ஏற்படுத்திய இந்த மதபுரட்சிக்கு எதிராக இருந்தவர்கள் எல்லோரும், உயர்சாதி இந்துகளாக தங்களை நிறுவிக்கொண்ட சைவமத பார்பனர், ராமனுஜரின் பின்னால் அணிசேர்ந்தது, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களை கொண்டே தன் கொள்கைகளை பரப்பினார், அவரின் பின்னால் தங்களுக்கு மத விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் அவர் பின்னால் சேர்ந்தனர். அந்த காலகட்டத்தில் சைவமத பார்பனர் செய்தது வைணவ எதிர்ப்பு அல்ல, ஏனென்றால் ராமானுஜருக்கு முன்பே ஸ்ரீரங்கத்தில் வைணவ வழிபாடும் இருந்த்தது, குலோத்துங்கனும் இருந்தான், ஆனால் ராமனுஜர் எல்லா தரப்பு மக்களையும் கோயிலுக்குள்ளே கொண்டுவந்தது தான் பார்பனருக்கு பிடிக்காமல், தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கவே இந்த மத எழுச்சியை, வைணவ சைவ மத எதிர்ப்பாக திரித்து சோழனின் துணையுடன் ஸ்ரீரங்கம் கோயிலையே இழுத்து மூடும் படி செய்தனர்.


இந்த காலகட்டத்தில் இந்த பிரச்சனை மிகப்பெரிய மதக்கலவரவமாக மாறி ராம்னுஜரை பின்பற்றியவர்கள், பார்க்கும் இடங்களில் எல்லாம் அடித்து துவைத்து கொலை செய்யப்பட்டனர். ராமனுஜர் மூலம் அணிவிக்கப்பட்ட பூணல்கள் அறுத்து எறியப்பட்டன, குடுமிகள் மழிக்கப்பட்டன, வலுக்காட்டயமாக அவர்களின் வழிபாட்டு இடங்களில் இருந்து துரத்தப்பட்டனர், இவையாவும் சைவ பார்பனர் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


அவர்களின் ஒரே பிரச்சனை ராமனுஜரின் இந்த புதிய முறையால் எல்லோரும் வேதம் படிகிறார்கள். எல்லோரும் பூணூல் போடுகிறார்கள் என்பதே, அதனாலேயே முதலாம் குலோத்துங்கன் காலத்தில், இந்த ஸ்ரீவைஷ்ணவர் எனப்படும் தென்கலை வைணவர்களின் மீது மதகலவரமும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
பல சாதியினர் ஒன்றாக சேர்ந்து உருவாகிய மதம் இந்த தென்கலை வைணவர்கள் என்பதாலேயே, இன்றும் மற்ற பார்பனர், இந்த தென்கலை அய்யங்கார்களிடம் திருமண உறவு வைத்துகொள்வதிலை. ஆனால் இதில் சோகமான விஷயம் என்னவென்றால், ராமானுஜர் காலத்துக்கு பின் இவர்கள் தாங்களும் பார்பனர் மற்றவர்கள் கீழ் சாதியினர் என்று ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றி நால் வருண மனு ஸ்மிரிதியை தூக்கிபிடிக்கத்தொடங்கியது தான்.
    

இந்த காலகட்டத்தில் தலைமறைவான ராமானுஜர் கர்நாடக பகுதியை ஆண்ட ஹோய்சால மன்னர்களின் நாட்டுக்கு சென்றுவிட்டார்.


அப்போது அதிர்ஷ்டம் அவரது பக்கம், விசிஷ்டாத்வைத தத்துவ குருவான யமுனாச்சாரியா என்பவர் பல நாட்களாக தன் குருகுலத்தை தலைமை ஏற்று  நடத்த வரும்படி ராமானுஜரை அழைத்து கொண்டிருந்தார். அதனால் அங்கே செல்ல முடிவுசெய்து அங்கே ராமனுஜர் செல்லவும் யமுனாச்சாரியா இறப்பதும் ஒரேநேரத்தில் நடக்கிறது. அதன் மூலம் ஏற்கனவே இருந்த தத்துவமான விசிஷ்டாத்வைதம் மேலும் ராமானுஜரால் புகழ் பெறுகிறது.


இந்த காலகட்டத்தில் அவர் கர்நாடகத்தில் பல வைணவ கோயில்களை மடங்களை நிறுவுகிறார். இன்று மிகவும் புகழ் பெற்ற திருப்பதி கோயிலை நிர்மானம் செய்கிறார். (இதை பற்றி மேலும் அறிய திருப்பதி பற்றிய எனது ஐந்து பகுதி பதிவுகளை blog-இல் காணலாம்)

வேதங்கள் சிறந்தது என்றால் அது ஏன் சமஸ்கிருதத்தில் இருக்கவேண்டும், எல்லோரும் படிக்கும் படி தமிழில் அல்லவா இருக்கவேண்டும் என்று சொன்னார்.  வேதாந்திர சூத்திரம் என்ற நூலை எழுதினர், அது ஸ்ரீபாஷியம் என்றும் அறியப்படும்.


இன்று தென்கலை பெருமாள் கோயில்களில் பாடப்படும் நாலாயிர திவ்யபிரபந்தங்களை தொகுக்கச்செய்தார்.

குலோத்துங்க சோழன் காலத்துக்கு பின் ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர், மீண்டும் ஸ்ரீரங்கன் கோயிலை திறந்தார், கடலில் வீசப்பட்ட கோவிண்டராஜபெருமாள் சிலையை மீட்டு எடுத்து சிதம்பரத்தில் மீண்டும் நிறுவினார். .

இன்று பெருமாளின் திவ்யதேசங்கள் என்று சொல்லப்படும் பல கோயில்களை நிர்மாணம் செய்தார். இவர் வழி வந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுபவர்கள், ராமானுஜராலே தான் தமிழ்நாட்டு தென்கலை வைணவ கோயில்களில் பெரிய அளவில் பூசைகளில் தமிழ் பயன்படுத்தபடுகிறது        


விசிஷ்டாத்வைதம் தத்துவம் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. கடவுள் என்பது பரமாத்தமா, மனிதர்கள் ஜீவாத்மா எனப்படும், ஜீவாத்மா, கடவுளிடம் இடைவிடாத பக்தியோடு இருந்தாலே போதும் அது முக்தி எனப்படும் பரமாத்தமாவிடம் போய் சேர்ந்துவிடும் என்பது தான்.

இதையே  யாருக்குமே புரியாதவாறு சொல்லும் வேறு ஒரு வெர்ஷன் உண்டு அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஏதாவது கதாகாலேட்சபம் சென்றீர்கள் என்றால் ஒரு நாமதாரி பார்பனன் யாருக்குமே புரியாதவாறு ஒரு மூணு நாள் உபன்யாசம் செய்வான் கேட்டு குழப்பிகொள்ளுங்கள்.

ராமனுஜர் எந்த புத்தங்கள் எழுதினர் எந்த கோயில்கள் எல்லாம் புனர்கிர்மானம் செய்தார் என்று என் எழுவில்லை என்று கேட்காதீர்கள், அவை எல்லாம் நீங்கள் இணையத்தில் தேடிக்கொள்ளலாம், மேலும் இங்கு நன் மத வரலாறு எழுத வரவில்லை, மத்ததில் உள்ள புரட்டுகளை பற்றி எழுதவே வந்துள்ளேன்   


ராமனுஜர் பிறப்பால் ஒரு பார்பனர் என்பதை தாண்டி மதத்தில் பெரிய புரட்சி செய்தார், ஆனால் இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற அவரது அடிப்படை கொள்கை அவரோடு சேர்த்து புதைக்கப்பட்டதே காலத்தின் கோலம்.        

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே