Thursday, August 24, 2017

தேவ மைந்தனின் பிறந்தநாள்



இந்த சம்பவம் நடந்தது கிமு44-ல், ஏசு உண்மையில் பிறந்தது இன்று எல்லோரும் சொல்லும் சைபர் வருடத்தில் அல்ல. அதற்கு 44 வருடங்களுக்கு முன்னரே அவர் பிறந்து விட்டார்.

இதை கிரிகோரியன் காலேண்டர் என்று நீங்கள் கூகிளில் தேடி பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.     

அந்த கிமு44-ல் நடந்த சம்பவம் பற்றியதே இந்த பதிவு.

அப்போது யஹோவா என்ற ஆதி கர்த்தர்,

மேரியை கடத்திக் கொண்டு வந்து ஓர் பனி படர்ந்த மலையில் ஒளித்து வைத்திருந்தார், ஏசு என்ற தேவ மைந்தனை, அவளுக்கு கொடுப்பதற்காக

அதாவது  பதின்ம வயதில் உள்ள பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தையை  உருவாக்கும் நல்ல எண்ணத்துடன்.

ஒரு வேளை இந்த ஆதி கர்த்தர் பதின்மவயதில் இருந்த மேரியை கற்பம் ஆக்காமல் அவளை திருமணம் செய்து கொள்ள ஒத்து கொண்ட யோசப்பை  கர்ப்பம் ஆக்கி காட்டியிருந்தால், அவனது வயிற்றில் இருந்து ஒரு தேவ மைந்தனை பிறக்க வைத்து கட்டியிருந்தால்  நானும் கர்த்தர் நல்லவர் மகிமை செய்யப் படவேண்டியவர் என்று ஒத்து கொண்டிருப்பேன்

ஒரு டீன் ஏஜ் பெண்ணை கடவுளின் பெயரால் கர்ப்பம் ஆக்குவது உலகம் முழுவதும் எந்த காலத்திலும், என் இன்றும் செய்வது சுலபமான வேலை. அதற்கு மகிமையான கர்த்தர் தேவையில்லை, தெருவோர கோயிலின் பூசாரியே போதும்.

ஆனால் எங்கள் ஊர் மகாவிஷ்ணு அதையும் நாரதர் மூலம் ஒருமுறை அல்ல 60 முறை செய்து காட்டி விஞ்ஞான கடவுள் என்று ஏற்கனவே பெயர் வாங்கி விட்டார், அந்த குழந்தைகள் தான் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் 

ஆதி கர்த்தரை விட மகாவிஷ்ணு knows more science

MY ANCHESTORS ARE NOT IDIOTS

ஆயினும் கர்த்தர் இப்படியாக மேரியை கடத்தி கொண்டு வந்து ஒரு பனிமலையில் ஒளித்து வைத்து விட்டு வேறு வேலையாக எங்கோ சென்று விட்டார்.

திரும்பி வந்த ஆதி கர்த்தரான யஹோவா பார்த்தால், மேரிமாதா அந்த பனி பிரதேசத்தின் குளிரில் இருந்து தன்னை காத்து கொள்ள தன் விரல்களில் மருதாணி வைத்திருந்தார்

மருதாணி நன்றாக கைகளில் ஒட்டிக்கொண்ட உடன், அந்த காய்ந்த மருதாணியை உடைத்து  போட்டார்.

அந்த மருதாணி துகள்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒரு குழந்தையாக மாரிவிட்டது.

வேட்டைக்கு சென்ற திரும்பி வந்த சிவபெருமானான சுடளிமாட சாமியான யஹோவா கோபமாக நான் இல்லாமல் எப்படி ஒரு குழந்தை பிறந்தது என்று கேட்டு அந்த குழந்தையின் தலையை வெட்டி விடுகிறார்  

மேரி மாதா, உடனே எப்படி குழந்தை பிறந்தது என்று நீங்கள் உங்கள் நண்பரான  நந்தியிடம் தான் கேட்க வேண்டும்

ஆனால் ஏன் நீங்கள் சோம பானம் குடித்து விட்டு வந்து என் குழந்தையை ஏன் கொன்று போட்டீர்கள் என்று கேட்க

யஹோவா, கவலை வேண்டாம் மேரி, உன் மகன் என் மகன்

இதில் நடுவில் நந்தியை எல்லாம் சாட்சிக்கு அழைக்க வேண்டாம்

இன்று இறந்த நம் மகன் மூன்றாம் நாள் உயிர்த் தெளுவான் என்று சொல்லி, மேரியை சமாதானம் செய்து விட்டு

தன் பூதகணங்களுக்கு எல்லாம் ஒரு கட்டளை போட்டார், ஏதாவது ஒரு லூசு வடக்கு பக்கம் NEET EXAM நடக்குதுன்னு தூங்கி கொண்டு இருப்பான், அவன் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்திருப்பான் அவன் தலையை வெட்டி கொண்டு வா என்று சொல்லி அனுப்பினார்.

ஆனால் தமிழ் நாட்டில் எல்லா லூசுகளும் வடக்கு பக்கம் தளி வைத்து தூங்கி கொண்டிருந்ததை பார்த்த பூத கணங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர், பாவம் அந்த பூதங்கள் எல்லாம் சமச்சீர் கல்வி கற்றவர்கள்.      

அப்போது யஹோவா கவலை வேண்டாம் அங்கே ஒரு யானை படுத்திருகிறது பாருங்கள் என்று சொல்லி, அதன் தலையை வெட்டுங்கள் என்று சொல்ல அந்த பூத கணங்கள் யானையின் தலையை கொண்டு வந்து கொடுக்க,
செத்து போன பிள்ளையின் உடலில் ஓட்டவைக்கிறார் யஹோவா 

இப்படியாக யார் பிள்ளை என்று தெரியாத காரணத்தால் அவர் பிள்ளையார் என்றும்

யஹோவாவின் பூத கணங்கள் அவர் மறு பிறவி எடுக்க காரணமாக இருந்ததால் கணபதி என்றும்              

நமது பாவங்களுக்கு மன்னிப்பு தரும் வினைகள் தீர்ப்பவர் என்பதால் வினை தீர்க்கும் நாயகன் என்றும்

இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் நமது பிள்ளையார், கிபி 500-ல் வாதாபியில் தன்னை வழிபட்ட சாளுக்கியன் கெட்டவன் என்பதால்


படையெடுத்து வந்த நல்லவன் நரசிம்மனோடு தமிழகம் வந்தவர் வீர விநாயகன்

சங்க காலத்தில் ஒரு இளம் பெண்ணாக இருந்த, பெண் புலவரான அவ்வையாரை கிழவியாக மாற்றி Work Place Sexual Harrasment-ல் இருந்து காப்பாற்றிய Feminist – ஆன கணேசனை

பெயர் மாற்றி இயேசு மூன்றாம் நாள் உயிருடன் வந்தார் போய் கதை பரப்பும் வெள்ளையர் புரட்டை நம்பாமல்

வீர விநாயகனை வணங்குவோம்

இந்த தேவ மைந்தனின் பிறந்த தினமான இன்று எல்லோருக்கும் ஹாப்பி பிள்ளையார் டே என்று சொல்லிக் கொள்கிறேன்

இன்னும் நம்பிக்கை இல்லையென்றால் இந்த பதிவில் உள்ள படத்தை பாருங்கள் ஏசு பிறந்தததாக சொல்லப்படும்  கிமு 44 December 25,  வளர்பிறை சதுர்த்தி நாள் தான் பிள்ளையார் பிறந்த தினம்  

இப்போதாவது என் முன்னோர்கள் யாருமே மூடரில்லை என்று புரிந்து கொண்டு தேவ மைந்தனான பிள்ளையாரின் பிறந்தநாளை மகிழ்வோடு எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்         

         

1 comment:

  1. அப்பப்பா! எப்டிங்க இப்படி! புருடா புராணங்களை உருவாக்கிய ரிஷிகளின் மறுபிறவிதான் நிச்சயமாக நீங்கள்! அப்படியே நம்புறமாதிரி! What a humour sense!

    ReplyDelete

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே